என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா-அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கறம்பக்குடி தாலுகா, பட்டத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மேலும் இதேபோல், குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் ஊராட்சி, ரெங்கம்மாள்சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் 2 ஆட்டுக்குட்டிகளையும்,
தலா ரூ.5,000 வீதம் துளசிமணி பாசி செய்வதற்கான ஒரு மாதத்திற்கு தேவையான மூலப் பொருட்களையும், பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வழங்கினார். மேலும் காமராஜபுரத்தைச் சேர்ந்த 51 நபர்களுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்களையும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
- சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
- அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ சங்கத்தினர் திடீர் மறியல்
- புதிதாக ஸ்டாண்டு திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது
அறந்தாங்கி,
அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வழியில் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாதததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தார். வட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மறியல் போராட்டத்தால் பேருந்து நிலையம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கௌரவ தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க நகர தலைவர் சேகர்,நகர செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பெரியசாமி, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. தலைவர் கர்ணா,
சி.பி.ஐ. ஒன்றிய துணை செயலாளர் போஸ் கணேசன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, விநாயகமூர்த்தி, சித்திக் முகமது, ரவி, கணேசன், நாகராஜ், கணேசன், சேகர், சிங்கசெல்வம், கல்யாணராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பயனாளிகளுக்கு வழங்கினார்.விராலிமலை வட்டம், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த 9 நபர்களுக்கு தலா 50 சதுர மீட்டர் பரப்பளவுடைய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அடி ப்படையில் அவர்களுக்கு வீடுகள் கட்டி க்கொடுக்கவும், பெட்டிக்கடை அமைத்திடவும், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், வட்டாட்சி யர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளது
- அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை,
தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம் தொன்மை சின்னங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை சங்ககால தொன்மை மிக்க இடமாக கருதப்படுகிறது. இங்கு கோட்டை கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்விடத்தை அகழாய்வு செய்வதற்கு அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துககு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்தப் பணியை தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முத்துராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
- புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் வேதனை
புதுக்கோட்டை,
தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது இதில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது தி.மு.க. எதிர்த்து உள்ளது. அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும் இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.
- அடிமர பகுதி தீயினால் சேதம்
- தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
புதுக்கோட்டை,
விராலிமலை தாலுகா காளப்பனூர் கிராமத்தில் ஆலங்குளம் ஆலடியான் கோவில் உள்ளது. கோவிலின் ஒரு பகுதியில் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்றபோது மரத்தின் அடிப்பகுதியில் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பழமைவாய்ந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆய்விற்கு உட்படுத்தப்படாத விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கத் தடை
- அதிகாரிகள் தரம் குறித்த ஆய்வில் திட்டவட்டம்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய விசைப்படகு துறைமு கங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு கள் தரம் குறித்து ஆய்வு மேற்கொ ண்டனர். கோட்டை ப்பட்டினம், ஜெகதாபட்டி னம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து சுமார் 550 க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் மீன்பிடித் தொழிலு க்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தை அனுசரித்து வருகின்றனர். இந்த தடைக்காலத்தில் விசை ப்படகுகள், மீன்பிடி உபகர ணங்கள் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடித்தடைக்காலங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வில் எத்தனை படகுகள் கடலுக்கு செல்ல தகுதியாக உள்ளது,எத்தனை படகுகள் சேதமடை ந்துள்ளது,அவைகள் இயக்தில் உள்ளனவா என்று மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளை ஆய்விற்கு உட்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு திருச்சி மண்டல துணை இயக்குநனர் சர்மிளா தலைமையில் 4 உதவி இயக்குனர்கள் உட்பட 8 குழுவாக 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.407 விசைப்படகுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.ஆய்வு குறித்தான அறிக்கைகள் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில், மீன்பிடித்த டைக்கா லங்களில் மீனவர்கள் தங்கள் படகை பழுது நீக்கி சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு சரி செய்யப்பட்ட படகுகள் உரிய ஆய்விற்கு பிறகு கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படும், ஆய்விற்கு காட்டப்படாத, உட்படுத்தப்படாத படகுகள் தடைக்கா லத்திற்கு பிறகு மீன்பிடிக்க அனுமதி க்கப்படாது என்று தெரிவித்தனர்.ஆய்வில் உதவி இயக்குநர்கள் ரம்யா லட்சுமி, ஜோதிலட்சுமணன், ஞானம், சின்னக்குப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கறம்பக்குடி திருமணஞ்சேரி ஊராட்சியில் இலவச தையல் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
- ஏழை பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு நடத்தப்படும் அரசு இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவினை மாரிமுத்து மாசிலாமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மாவட்ட தாட்கோ மேலாளர் முத்துரத்தினம் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கரம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான தவ.பாஞ்சாலன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர் எம் ஓ இந்திராணி திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 98 பஞ்சாயத்துகளில் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டம்
- விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 98 பஞ்சாயத்துக்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
- புதுக்கோட்டையில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு
- எம்.எம்.அப்துல்லா எம்.பி. திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், டி.டி.பிளான்சாலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட கலெக்டரி ன் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர மாலைநேர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை எம்பி, எம்.எம்.அப்துல்லா பூங்காவை திறந்து வைத்தார். இவ்விழாவில் புதுக்கோ ட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு, க.லதா, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 'சிறப்பாக பணியாற்றிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருமயம் , ஆர்.ஆர்.சமுத்திரம் விற்பனையாளர் தனபாலுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், ஆலங்குடி, சிக்கப்பட்டி விற்பனையாளர் அமுதாவிற்க்கு இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம், ரேஷன் கடை எடையாளர் ராமாயிக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மீமிசல் அமுதம் அங்காடி எடையாளர் கண்ணகிக்கு இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழோடு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் சதீஸ்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






