என் மலர்
புதுக்கோட்டை
- கலெக்டர் தலைமையில் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது
- இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும், ஒரே நாளில் ஒரே இடத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
எனவே, ஆய்விற்கு கொண்டு வரப்படும் வாகனங்களோடு, பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றுடன், ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது
- 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 600 க்கு 571 மதிப்பெண் இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2-வில் முகமது ஆதில் என்ற மாணவன் வணிகவியல் கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், தீக்ஷா என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எம்.ஸ்ரீனிவாசன், எஸ். ஸ்ரீநிதி, எம்.பிரவீன் ஆகிய மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.
- விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது
புதுக்கோட்டை:
தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனையான மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பார்கள் பல இடங்களில் இணைந்து செயல்படுகிறது. டாஸ்மாக் பார்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் அனுமதிக்கப்பட்ட நேரம். ஆனால் இந்த நேரத்தை விட சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுக்கோட்டை நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் பார்களில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து போராட்டம் நடந்தது.
போலீசாரும் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்தாலும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்' வைத்தனர்.இந்த சோதனை குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.
எந்தெந்த பார்கள் என்ற விவரத்தையும் டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்க மறுத்து விட்டனர். மாவட்ட மேலாளரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும் என கூறிவிட்டனர். அவரை தொடர்பு கொண்டால் பதிலும் அளிக்கவில்லை.இதற்கிடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளின் அருகில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் அகற்றினர்.
- புனித கித்தேரியம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
- ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து கே.கே.பட்டி பங்குத்தந்தை ஆரோ சேசுராஜ் தலைமையில் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.
விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவு அலங்கார தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில், புனித கித்தேரியம்மாள் மற்றும் தெய்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்தன. இதில் சாதி, மத, இன பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கண் கவர் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
- பொது கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருவரங்குளம் ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்ட பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை ஆகியவற்றை ஆய்வு செயதார்.குப்பக்குடி கிராம அங்காடியினையும், பொட்டத்திக்கொல்லை கிராமத்தில் நடப்பட்டுள்ள வேப்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்களின் பராமரிப்பையும் அவர் ஆய்வு செய்தார். .
பின்னர் கே.வி.கோட்டையில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை அவர் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள பொதுகிணற்றை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, கல்லுகுண்டு ஊரணி குளம் ரூ .58 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது
- வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.
- கறம்பக்குடி அருகே கிணற்றில் முதியவர் பிணம் மிதந்தது
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெகுநாதபுரம் கடைவீதிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புது விடுதி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றது
- சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி சொர்ணராகினி வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
மேலும் மாணவி ஹரிலட்சுமி பயாலஜி பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தர்ஷினி 477 மதிப்பெண்களும், பவதாரிணி 475 மதிப்பெண்களும், குணபிரியா 473 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்று தேர்ச்சியடைந்ததோடு, பள்ளியின் புகழை பறைசாற்றி உள்ளனர்.சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் விராலிமலை விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் தற்போது பிரிகேஜி முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04339-220087, 04339 221380, 89402 43366, 89402 43377, 89402 43388 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
- ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர் பவனி மற்றும் நவநாள் திருப்பலி, மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. வேங்கிடகுளம் பங்குத்தந்தை பபியான் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள் அருட்சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தேர்பவனி நடந்தது. இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த தேர் பவனி நான்கு வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
- இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
வடகாடு பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, பிச்சி, அரளி, சென்டி, ரோஜா போன்ற பூக்கள் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி ஆகும் பூக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பூ கமிஷன் கடைகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் வெளிமாவட்டங்கள் வரை பஸ், மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் உள்ளிட்டவைகளில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
அதிகாலை நேரங்களில் இருந்தே பூக்களை பறித்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் பூக்களை கொண்டு சேர்த்தாக வேண்டும். அதனால் கூலி விவசாய தொழிலாளர்களை பயன்படுத்தி பூக்களை பறிக்கும் விவசாயிகள். ஒரு கிலோ பூ பறிக்க ரூ.50 வரை கூலி கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது வெயில் காலை 8 மணிக்கு எல்லாம் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பூக்களை பறிக்க படாதபாடு பட வேண்டி இருப்பதாகவும், மேலும் தற்போது கோடை வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருப்பதால் பூக்கள் விற்பனையும் சரிவர நடப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.
பூக்களின் விலை வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.1 கிலோ மல்லிகை ரூ.150, முல்லை ரூ.120, கனகாம்பரம் ரூ.300, சென்டி ரூ.40, ரூ.50, பிச்சி ரூ.30, ரூ.40, சம்பங்கி ரூ.10, ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகின்றன.
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தேராவூர் மற்றும் அகரப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேராவூர் மேட்டுப்பட்டி பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கள்ளம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொடும்பாளூர் லஞ்சமேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மது விற்ற கிருஷ்ணன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






