search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "byte"

    • அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு நாங்கள் எதிரி என்று கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்
    • செந்தில்பாலாஜி கைதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

    கரூர்,

    கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரம்பலூரில் பா.ஜ.க . நிர்வாகியை தாக்கி பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தி.மு.க., பா.ஜ.க.வை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க.வினர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கைது செய்யவில்லையென்றால் நாளை மறுநாள் பெரம்பலூரில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுவரை நடந்த யாத்திரையில் 6 தொகுதிகளை தள்ளி வைத்துள்ளோம். டிச, ஜனவரியில் இந்த யாத்திரை நடைபெறும். கர்நாடக நீர் பிரச்னையில் கர்நாடகா அரசுக்கு பாஜக தான் துணையாக இருப்பது எனக்கூறுவதில் உண்மையில்லை.

    தமிழக பாஜகவை பொறுத்தவரை தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த பிரச்னையில் யார், யாருக்கோ கடிதம் எழுதும் முதல்வர் மௌனம் சாதிப்பது எதற்கு எனத் தெரியவில்லை.

    செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாததற்கு இன்னும் அவர் அமைச்சராகியிருக்கிறார், அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கலாம், செந்தில்பாலாஜியின் தம்பி தலைமறைவாகியிருக்கிறார். தம்பியையே பிடிக்க முடியாத காவல்துறையினர் அண்ணன் வெளியே வந்து சாட்சியங்களை திரட்டினால் என்ன நியாயம் கிடைக்கும் என நீதிபதி கேட்டுள்ளார். இதனால் செந்தில்பாலாஜியின் கைதுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை, ஊழலுக்கு எதிரி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிரி. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கரூர் மாவட்டம் என்.புதூரைச் சேர்ந்த கனராஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் இறந்தபோது, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் சிரமம் இருந்த நிலையில், பாஜகவினர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கனகராஜின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

    • தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்படுத்த அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்
    • புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவுறுத்தல

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- பட்டாசு வெடிக்கும் போது ஒலி அளவு 110 லிருந்து 170 வரை அதிகமாக ஒலிவந்து ஒலிமாசு ஏற்படுகிறது. ஆனால் பசுமைப் பட்டாசை பொறுத்தவரை 100-ல் இருந்து 110 டெசிபில் அளவிற்கு தான் வெடிக்கக் கூடியது அதனால் ஒலிமாசும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் நாம் அனைவரும் இயற்கையை பாதுகாப்பதற்கு பசுமை பட்டாசு சத்தம் குறைவு உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    பசுமை பட்டாசுகள் குறித்து வருவாய்த்துறை மூலம் போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பசுமை பட்டாசு உற்பத்திக்கு என்று சதவீதம் நிர்ணயிக்கவில்லை. பசுமை பட்டாசை படிப்படியாக கொண்டு வரும் பொழுது முழுமையாக பசுமை பட்டாசு பயன்பாடு முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்வு என்று திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்
    • இளைஞர் தேர்வாக வாய்ப்பு என்று திருநாவுக்கரசர் தகவல்

    புதுக்கோட்டை, 

    திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநா வுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் புதுக்கோ ட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-தலைவர் மாற்றப்படலாம்தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடு கிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு,மகளிர் உரிமை மாநாடு பெரியார் அண்ணா கால த்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய் வும் இந்த மாநாடு நடை பெறுகிறது.கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை, அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றபடாலாம்,

    மீண்டும் போட்டியிட விருப்பம்

    அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்க படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல் வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.நான் மீண்டும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி யிட விரும்புகிறேன். அத ற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்ப கிறேன்.நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோ னதை தடுத்து இருப்பேன்,பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறு பான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.5 மாநில தேர்தல் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன் னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநில ங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன் னாள் எம்எல்ஏ சுப்பு ராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்தி ரசேகரன், சூர்யா பழனி யப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்
    • கரூரில உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்று குழுவுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கர்நாடக அரசு கொடுக்க மறுக்கிறது. தமிழகத்திற்கு 50 சதவீத தண்ணீரை கூட கொடுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் வயிற்றில் அடிக்க கூடாது. தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரோடு தொலைபேசியில் பேசி இருக்க வேண்டும். டெல்லி சென்று பேசி இருக்கலாம். இந்த விசயத்தில் தமிழக முதல்வர் கெளரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

    • வரும் எம்பி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்
    • பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்களுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திப்போம் என்று உறுதி

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது,

    நீண்ட காலமாக காவிரி தண்ணீரை தர கர்நாடகா மறுத்து வருகின்றனர். முதல்வர் சீத்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் அந்த மண்ணின் மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பது போல் உங்களுக்கு வாக்கு செலுத்திய மக்களுக்கு திமுக ஏன் உண்மையாக இருக்கக் கூடாது.

    காவிரி நதிநீர் உரிமை, முல்லை பெரியார் நதி பிரச்சினை, நீட் தேர்வு, கச்சத்தீவு பிரச்சினை என்று அனைத்திற்கும் உச்சநீதிமன்றம் சென்று தான் தீர்வை பெறவேண்டும் என்றால் என்றால், இந்த நாட்டை நிர்வகிப்பது நீதிபதிகளா? சட்டமன்றம் , பாராளுமன்றம் எதற்கு? தி.மு.க. காங்கிரஸ் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் நாங்கள் வரவேற்போம். உலக மயம், தனியார் மயம், தாராள மயம், என்பதுதான் பாஜக, காங்கிரஸ் கொள்கை.

    நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராய் இருக்கிறது. வரும் எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடு கிறோம். பெண்களுக்கு இருபது தொகுதி, ஆண்க ளுக்கு 20 தொகுதி ஒதுக்கி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

    திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அமைப்பு எங்களோடு வருமானால் அது குறித்து யோசிப்போம், இப்போது அதற்கு சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

    • பா..ஜக. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது மகிழ்ச்சி என்று சீமான் தெரிவித்துள்ளார்
    • அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்

    அரியலூர்,

    அரியலூர் அண்ணாசிலை அருகே நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சீமான் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜகவிலிருந்து, அ.தி.மு.க. விலகியது காலம் தாழ்த்திய முடிவு என்றாலும் அது மகிழ்ச்சி தான். இதுபோன்ற முடிவை திமுக எடுக்குமா? கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக போராடவில்லை. அப்படி இருக்கையில் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். கச்சத்தீவை எடுத்து க்கொடுத்தது, தமிழர்களை கொன்றது, நீட் தேர்வு, மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போதும், தற்போதும் அவர்களுடன் திமுக கூட்டணி வைத்து ள்ளது. அதிமுக எடுத்த முடிவை, திமுக எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து அவர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்துக்கு, அக்கட்சியின் மண்டலச் செயலர் நீலமகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் குமார், மாவட்டத் தலைவர் சுதாகர், மாவட்டப் பொருளாளர் கபில்ராஜ், தொகுதிச் செயலர் லட்சுமணன், செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மகளிரணி ஹேமலதா, சுகுணா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் கறுப்பு சட்டை இயக்கம் நடந்தினர்
    • பாஜகவால் உலக அளவில் இந்தியா பெருமை உயர்ந்துள்ளதாக பேட்டி

    பெரம்பலூர், 

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் இது குறித்து பா.ஜ.க. மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு புதிய அணை கட்டுவதற்கான ஒரு அறிவிப்பை செய்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசிடம் கேட்டு உரிய அனுமதி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் கூட்டி, கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகுதான் மேகதாது அணையை கட்ட முடியும் என்ற ஆணையை பிறப்பித்தார்.ஆனால் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.900 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி ஆகியோர் ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது.கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் (1969 முதல் 1975ம்) கபினி அனை, சியாமாநதி, சொர்ணநிதி, கரங்கி அணை என 4 அணை கட்டப்பட்டது. இதற்கு அப்போதிருந்த மத்திய அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கருணாநிதி தடுக்காமல் ஆதரவளித்தார். அதே போலத்தான் தற்போதும் ஸ்டாலின் அரசு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கால் மவுனம் காத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • செந்தில் பாலாஜி வழக்கில் ரூ. 19000 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என்று எச்.ராஜா கூறி உள்ளார்
    • திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி அளித்த போது பகீர் தகவல்

    திருச்சி,

    பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில்  முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, டெல்டா விவசாயிகள் வாயில் மண்ணை கொட்டியுள்ளனர் காங்கிரசார். மேகதாது அணை கட்டுவோம் என்று கூறிய காங்கிரசாரை சம்பிரதாயத்துக்காக கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அங்கு போய் சித்தராமையா சிவக்குமாருக்கு பாத பூஜை செய்ய சென்றுள்ளார். மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தெளிவான முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருந்தது. காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் திமுக தான். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கண்டு கொள்ளாமல் தமிழகத்தை அழிப்பதற்காக கர்நாடகாவில் பல அணைகளை கட்ட அனுமதித்தார்.அதுபோல் தான் இப்போது மு.க ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார். தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் மீது அமுலாக்கத்துறை நடவடிக்கை குறித்து, உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது பாஜக வழக்கு தொடரவில்லை. ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜி, பொன்முடி வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அமுலாக்கத் துறைக்கு வந்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்து திருச்சியா, தூத்துக்குடியா என்பது தெரியவரும். அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது. ஆடி 1-ந் தேதி பொன்முடி வீட்டில் சோதனை. செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் 19 ஆயிரம் கோடி உள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் மீது சோதனை நடத்தவில்லை.குளித்தலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வரும். அப்போது செந்தில்பாலாஜி சிறைக்குச் செல்வார் என்றார். ஆனால் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் செய்யாததை, அமுலாக்கத்துறை செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து பாரதிய ஜனதா சோதனை நடத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தர்மபுரி எம் பி சிவன் பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக கேட்டபோது,ஈவேரா பெரியாருக்கும் மணியம்மைக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அப்போது அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.பேட்டியின் போது, மாவட்டத் தலைவர் எஸ். ராஜசேகரன், நிர்வாகிகள் ஒண்டி முத்து, பொன்.தண்டபாணி, லீமா சிவக்குமார், ஸ்ரீராம் சங்கர், ஊடகபிரிவு மாவட்டத் தலைவர் இந்திரன், துணைத் தலைவர் சிவக்குமார் , ம மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமலாக்கத்துறையினர் வணிகர்களை சோதிக்க அனுமதிக்க கூடாது என்று விக்கிரம ராஜா கூறி உள்ளார்
    • புதுக்கோட்டையில் பேக்கரி திறந்து வைத்தபின்னர் பேட்டி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் மஹராஜா பேக்கரியின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரம ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.கொள்ளையடி ப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படு வதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொ ண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கி ன்றோம்.இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொ துமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளி ப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது.தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பேக்கரி மஹராஜா உரிமையாளர் அருண் சின்னப்பா, புதுக்கோட்டை தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பலர் இருந்தனர்.

    • திருச்சி போலீசார் விருப்பம்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என கமிஷனர் தெரிவித்துள்ளார்
    • போலீசாருக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேட்டி

    திருச்சி,

    திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடந்தது. முகாமை மாநகர காவல்துறை கமிஷனர் சத்யபிரியா தொடங்கி வைத்தார்.

    இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், டாக்டர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த காவல் துறை ஆணையர் சத்யபிரியா:- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம். ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது என்றார்.

    • பொன்னேரியில் ரூ.662.73 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணி
    • பா.ம.க. வழக்கறிஞர் பாலு தகவல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு 662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ஆம் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளது.500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம்பெறவில்லை.முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது.வரும் ஆண்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடுவதற்கான பெயர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் பெயர்கள் இடம் பெற செய்ய வேண்டும்என கூறினார்.

    • மேகதாது அணைவிவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என வைகோ குற்றம்சாட்டி உள்ளார்
    • திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி

    திருச்சி,

    திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய திருநாட்டில் யாரும் செய்ய முயலாத தகடு தத்து வேலைகளை தமிழ்நாடு ஆளுநர் செய்து வருகிறார். அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சர்களை நீக்குவதும், மாற்றுவதும் முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு என அரசியல் சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவர் டிஸ்மிஸ் செய்ததாக ஆறு மணிக்கு செய்தி கொடுக்கிறார். நடுராத்திரி ஞான உதயம் வருகிறது. அதனை நிறுத்தி வைக்க சொல்லுகிறார். அதை திருப்பி வாங்கிக் கொள்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையை எந்த கவர்னரும் செய்ததில்லை.தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் மேகதாட்டு அணையை கட்ட வேண்டுமென கர்நாடகா முனைகிறது. அணை கட்டப்பட்டால் 5 மாவட்டங்களின் பாசனங்கள் அடியோடு பாழாக்கப்படும். குடிநீருக்கும் பிரச்சனை ஏற்படும். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா முனைந்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். இப்பிரச்சனை தமிழகத்தை பாதிக்கக்கூடியது. இதில் ஒன்றிய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணையையும் வைக்கிற போக்கை மாற்ற வேண்டும்.அதனால் தான் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறோம்.அதற்கு எல்லா இடங்களிலும் கட்சி சார்பற்று ஆர்வத்தோடு கையொப்பமிட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்குப் பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்,தமிழ்நாட்டுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சென்றடைகிறது. இதுவே வெற்றி தானே. ஆளுநரின் போக்கு அவரது நடை உடை பாவணைகள் நடந்து செல்கிற போக்கு, பிரிட்டிஷ்காரர் கவர்னர் போல அவர் நடந்து ெகாள்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தமிழ்நாட்டில் அவர் பருப்பு வேகாது. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கிறோம். வேறு கேள்விக்கு இடமே இல்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

    முன்னதாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட துணை செயலாளர்கள் டோல்கேட் துரை வடிவேல், மல்லி ராஜன், பெல் ராஜ மாணிக்கம், பகுதி செயலாளர்கள் ஆசிரியா முருகன், ஆடிட்டர் விேனாத், கே.பி.மனோகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    ×