என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் தூர் வாரும் பணி
    X

    பொன்னேரியில் தூர் வாரும் பணி

    • பொன்னேரியில் ரூ.662.73 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணி
    • பா.ம.க. வழக்கறிஞர் பாலு தகவல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு 662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ஆம் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளது.500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம்பெறவில்லை.முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது.வரும் ஆண்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடுவதற்கான பெயர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் பெயர்கள் இடம் பெற செய்ய வேண்டும்என கூறினார்.

    Next Story
    ×