search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது
    X

    போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது

    • போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது
    • விஜிலென்ஸ் கமிட்டி அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு

    திருச்சி,

    திருச்சி மண்டலத்தி ற்குட்பட்ட காவல் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி செய்து வருபவர்களின் குடும்பத்தார் களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இன்று நடந்தது.இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலி சூப்பரண்டுகள் கலந்து கொண்டனர்பின்னர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் நிருப ர்களிடம் கூறும்போது;-தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சீருடை பணியாளர்களின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை இன்று துவங்கி வைத்துள்ளோம்.600 பேர் இந்த முகாமில் கலந்து கலந்து கொண்டு ள்ளார்கள். அவர்களை வேலைக்கு தேர்வு செய்ய 100 தனியார் கம்பெனி அதிகாரிகள் வந்திரு க்கிறார்கள். இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்கி ன்றோம்.போதைப் பொருட்கள் விற்பனைதிருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி - கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்துவிஜிலென்ஸ் கமிட்டி உருவாக்கி காவல்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குண்டாசில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×