என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டம் ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
- பெரம்பலூர் செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் அருகே பிளஸ் 2 மாணவர் விபத்தில் பலியானார்
- உடன் சென்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்
பாடாலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ செல்வம். இவரது மகன் பிரசாந்த் (வயது 17)ஆண்டி மடம் கண்டியம் கொல்லை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (17) புது வெட்டக்குடி தினேஷ் (17) மேல மாத்தூர் கர்ணன்( 17 )ஆகிய 4 பேரும் மேல மாத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை அறிந்த பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். சடைக்கன் பட்டி என்ற பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது.இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவர் பிரசாந்த் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பின்னர் திருமுருகன், தினேஷ், கர்ணன் ஆகிய 3 பேரையும் அவர்களின் பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்ற மாணவன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்படம் திறப்பு விழா நடைபெற்றது
- மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்டப திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷிம லையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் 30-ந்தேதி தொடங்கியது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் தொடங்கி எளம்பலூர் பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வர் கோயிலில் முடி வடைந்தது. ஊர்வ லத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெற்றது. காகன்னை ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 8 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 11 மணியளவில் மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரணையும், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, சினிமா பாடகர் பிரபாகரன், வில்லிசை மாதவி ஆகியோரது இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை தலைவர் துரைகுமார், கடலூர் எஸ்பி ராஜாராம், பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, சினிமா டைரக்டர் யார்கண்ணன், வில்லிசை வேந்தர் கிஷோர்குமார், திட்டக்குடி ராஜன், சிங்கப்பூர் சிங்கைராஜாபாபா, ரத்தினவேல், டிஎஸ்பிகள் பழனிசாமி, வளவன், சிவசேனா மாநில செயல் தலைவர் சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி மற்றும் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.
- பேரளி கிராமத்தில் குடிநீரில் புழுக்கள் வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியலால் அப்பகுதியில் போக்குரத்து பாதிக்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மேற்கு தெரு, காலனி தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த ஊரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் காலனி தெரு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீர் புழுக்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த காலனி தெரு மக்கள், எங்கள் பகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை. கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. அடிக்கடி தண்ணீரில் புழுக்கள் கலந்து வருகிறது என்று கூறி, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரியலூர்-பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலனி தெரு பகுதிகளுக்கு வரும் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன்பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மொபட் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலியானார்
- பதவி உயர்வுக்காக படித்து கொண்டிருந்தவர் பரீட்சை எழுதி விட்டு திரும்புகையில் சோகம்
பெரம்பலூர் ராயபுரம் தாலுகா வெள்ளூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பதவி உயர்வு பெறுவதற்காக துவாக்குடி அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாக இ.இ.இ.படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மாலை நண்பர் ஒருவருடன் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காட்டூர், கைலாஷ் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த மொபட் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் தனலட்சுமி மகளிர் கல்லூரியில், வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர்,
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் எஸ்.ராணி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். பெங்களூருவில் உள்ள ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்ஃபார்ம் நிபுணர் தணிகைவேல் பேசும்போது, சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல்துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளை தாண்டி உளவுத்துறையைப் பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் ஓ.பி.எஸ். அணி - அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி கோஷம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரம்பலூர் காந்தி சிலைக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மாநில ஜெ. பேரவை செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.இதில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சின்னராஜேந்திரன், முகமது இக்பால், சிவக்குமார், பெருமாள், ஜெயக்குமார், மோகன், வீரமுத்து, கலைவாணன், முத்துசாமி, இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளான மேசைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .மேசைப்பந்து பிரிவு போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பந்து போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கிழுமத்தூர் மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அறிவேல் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அகரம் சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் சீகூர் வடகலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன்.
இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகா மையில் அமைந்துள்ள நூலக கட்டிடத்திற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பி டத்தை கட்டியுள்ளார்.
இந்த கழிப்பிடம் அந்த பகுதியில் வசிக்கும் சின்னதுரை (வயது 43) என்பவரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த சின்னத்துரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பினார்.
பின்னர் நேற்று குடிபோதையில் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் என் வீட்டுக்கு முன்பாக எதற்கு கழிப்பிடம் கட்டினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரவீனா (33) ஊராட்சி மன்ற தலைவரை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது சின்னத்துரை அவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் தம்பதியை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- நண்பர்களுடன் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- நண்பர்கள் ஆம்புலன்ஸ் மீது கல் எரிந்ததில் கண்ணாடி உடைந்தது
பெரம்பலூர்,
அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்நதவர் முருகன். இவரது மகன் சந்திரன் (வயது 22). இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் களரம்பட்டி மருதையான் கோவில் ஒடை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் சந்திரன் அந்த இடத்தை விட்டு சென்றார்.இதையடுத்து அவரது நண்பர்கள் களரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சந்திரன் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து மது குடித்த இடத்தின் அருகே கருவேல மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்ட நிலையில் சந்திரன் தொங்குவதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கு விரைந்து சென்று சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்திரனுக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர்.அப்போது அவரது நண்பர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சை எடுங்கள், சந்திரனை மேல் சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் என்று அங்குள்ளவர்களிடம் கூறி தகராறு செய்துள்ளனர். அதற்கு டிரைவர் 108-க்கு போன் செய்தால் வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர் ஆம்புலன்சின் முன் பக்க கண்ணாடியின் மீது கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. பின்னர் அவர்கள் சந்திரனை மோட்டார் சைக்கிளை அழைத்து கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, ஆம்புலன்ஸ் மீது கல் எறிந்த சந்திரனின் நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் ஏறி கார் விபத்துக்குள்ளானது
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கொடும்பப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை கொடும்பப்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன் (32) என்பவர் ஓட்டினார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்புக்கம்பியில் மோதி, அதன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டிற்கு முன் பொது கழிப்பிடம் கட்டியதால் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்
- தடுக்க சென்ற மனைவியின் கை எலும்பு முறிந்தது
அகரம் சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் சீகூர் வடகலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன்.இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள நூலக கட்டிடத்திற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பிடத்தை கட்டியுள்ளார்.இந்த கழிப்பிடம் அந்த பகுதியில் வசிக்கும் சின்னதுரை (வயது 43) என்பவரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த சின்னத்துரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பினார்.பின்னர் நேற்று குடிபோதையில் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.பின்னர் அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் என் வீட்டுக்கு முன்பாக எதற்கு கழிப்பிடம் கட்டினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரவீனா (33 )ஊராட்சி மன்ற தலைவரை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது சின்னத்துரை அவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.இதில் பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் தம்பதியை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






