என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
- போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டிகள்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகரைச் சுற்றி ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. நகரத்தின் போக்குவரத்து விரிவடைந்து வருதால், தற்போது பெரம்லூர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய சாலை சந்திப்புகளான வடக்குமாதேவி, தண்ணீர் பந்தல், எளம்பலூர் பகுதிகளுக்கு அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகிறது.இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு உரிய வகையில் பார்க்கிங் வசதிகளோ, வேக கட்டுப்பாடோ கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால் சாலைகளின் ஓரங்களிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படும் இடத்தை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தின் எதிரிலேயே வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்திற்குள் இருந்து வரும் பேருந்தை திரும்பி செல்வதற்கு ஓட்டுனர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.மேலும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவே ஆட்களை ஏற்றிச் செல்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, போக்குவரத்து போலீஸ் ஆகிய அலுவலகங்களில் இது குறித்து ஏராளமான மனு கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது,பெரம்பலூரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்திலும் , அதிகளவில் ஆட்கள் ஏற்றப்படுகிறது. மேலும் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு, செல்கிறது. சரியான பராமரிப்பு இல்லாதததால் அதிகளவு புகையை வெளியிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களை கட்டப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து பெரம்பலூர் ஆர்டிஓ பிரபாகரன் கூறும்போது,விதிமுறைகளை மீறும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். புதிதாக எந்த ஷேர் ஆட்டோவிற்கும் பர்மிட் தரப்படுவதில்லை. தற்போதுள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
- பெரம்பலூரில் கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலி, குத்துவிளக்குகள், உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளது
- திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் தனியார் பருத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு பின்புறம், எளம்பலூரில் இருந்து செங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட குண்டுமணியுடன் சேர்ந்த 1 பவுன் தாலி, 3 அடி உயர பித்தளை குத்து விளக்குகள் 2 மற்றும் பொருத்தப்படாத உண்டியலை திருடிச்சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
- துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, அருமடல் பிரிவுசாலை, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், அருமடல், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திராநகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாத குழந்தை உடலை பொது நல சேவகர்கள் அடக்கம் செய்தனர்
- விபத்தில் சிக்கிய தம்பதி மருத்துவமனையில் கவலைக்கிடம்
பெரம்பலூர்,
சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 34) - பத்மா (32) தம்பதி. இவர்களின் குழந்தைகள் தஷ்வந்த் (4) தீக்சித் (85 நாள் குழந்தை) இந்நிலையில் கணேசன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருப்பரங்குனறம் கோயிலிலுக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி சென்னை திரும்பிக் கொண்டி ருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் அருகே சென்ற போது கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேசன், பத்மா உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உறவி னர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெறுகின்றனர்.கணேசன், பத்மா திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் விபத்தில் காயமடைந்த 85 நாள் குழந்தை தீக்சித் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தது.பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கி டமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குழந்தை யின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் குழந்தையின் உடலை பெரம்பலூரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.இது குறித்து அறிந்த உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் குழந்தையின் உடலை தங்களது சொந்த செலவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். மனிதநே யமிக்க இந்த செயலுக்கு குழந்தை யின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
- அகரம்சீகூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
- ரூ.2500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்
அகரம்சீகூர்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் திட்டக்குடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான நிலம் பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தார்.இதையடுத்து அதற்கான சான்றில் கையெழுத்து பெறுவது தொடர்பாக அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் (வயது 29) ராமகிருஷ்ணன் அணுகியுள்ளார். அப்போது அதற்கு பிரகாஷ் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று மதியம் அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷிடம் ரூ.2,500-ஐ கொடுத்தார். அதனை பிரகாஷ் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிரகாஷை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அகரம்சீகூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறித்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- தப்பியோடிய மற்றோருவரை மங்களமேடு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வடக்கலூர் அகரம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சிந்துமதி(வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வெளிக்கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், சிந்துநதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.இதனால் திடுக்கிட்டு கண் விழித்த சிந்துமதி, மர்ம நபர்களை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அலங்கரி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி(57) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யாசாமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றோருவரை மங்களமேடு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசாரிடம் புகார்
- 17 வயது கல்லூரி மாணவியை வாலிபரிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
- பெரம்பலூர் துறைமங்கலத்தில் கோவிலில் உண்டியல் திருட்டு போனது
- பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோட்டில் இருந்து கவுல்பாளையம் செல்லும் சாலையில் வீர ரெட்டியார் அம்பலக்காரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் பூட்டு நேற்று உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் கருவறையில் பொருத்தப்படாமல் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் காலனி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உதயசூரியன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வருகிறார். கோமதி மேலப்புலியூர் அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கோமதி தனது வீட்டை பூட்டி விட்டு மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் தனது அக்காளின் மருமகளுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கிருந்து நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனா். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூரில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது
- மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் அறிவிப்பு
பெரம்பலூர்,
அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அக் 20 -2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- கோவில்பாளையத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் சக்தி சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நல்ல சேவகர் அய்யனார், செம்மலயபர், ஆகாச கருப்பு, கருப்புசாமி, மதுரை வீரன், காரடையான் சங்கிலி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை , அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் துங்கபுரம், புது வேட்டக்குடி, காரைப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்
- மங்களமேடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் தமிழரசன் (வயது 23). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






