என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விசுவக்குடியில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
    • இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி விசுவக்குடி பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

    • பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சி பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • தற்கொலை காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கமலகண்ணு (வயது 58), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு கீர்த்திவாசன், பத்மவாசன்ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாப்பாத்தி பெரம்பலூர் கோர்ட்டில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பத்மவாசன் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். கமலகண்ணு நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கமலகண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கமலகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலகண்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக உள்ளார். இவருக்கு சரசுவதி (45) என்ற மனைவியும், அருண்குமார் (17) ராஜவிக்னேஷ் (8) ஆகிய மகன்களூம் உள்ளனர்.

    இன்று காலை கணபதி வழக்கம்போல வங்கிக்கு வேலைக்கு சென்றார். பணியில் இருந்த அவர் வங்கு அலுவலகத்தின் உள்ளேயே திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அங்கு பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியில் செயலாளர் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை:விஜயின் “லியோ” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க
    • குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    நடிகர் விஜய் நடித்த 'லியோ' தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 13-ந் தேதி அன்று சிலகட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி வருகிற 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புகாட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிடவும், காலை 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காணவரும் பொதுக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதித்து ள்ளது.

    மேலும் இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19ம் முதல் 24ம் தேதி வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையா ளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பா டுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்தமுறையில் அமைத்திட வேண்டும் எனவும், திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடு கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், திரையரங்கு களை சுகாதாரமாக பராமரிக்க போதுமானகால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறை களுடன் சிறப்புகாட்சி நடத்தப்பட வேண்டும் எனவும், மேலும் அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிககட்ட ணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் வட்டாட்சியர் 9445000610, வேப்பந்தட்டை வட்டாட்சியர் 9445000611 மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000458 என்ற எண்களில் புகார் தெரிவிக்க லாம். அரசு விதித்துள்ள மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திரையரங்கு களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்படு கிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    டிப்பர் லாரி மீது வேன் மோதிய விபத்தில்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம்

    குன்னம்,  

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரியலூர் குபேர நகரில் நடந்து சென்ற

    குன்னம்,  

    அரியலூர் குபேர நகை சேர்ந்தவர் சுபாஷினி(வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளி முடிந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரின் தாலி சங்கிலியை பறித்து சென்று உள்ளனர்.

    இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செயின் பறித்த பெரம்பலூர் வேப்பந்தட்டை பாலையூர் நவீன்குமார்(23), திருச்சி தென்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தான்ஸ்ரீ என்கிற தரணி(18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • தந்தை இறந்த துக்கம் தாளாமல் குடிபோதையில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
    • இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம், எழுமூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சரவணன் (வயது 20). ஊரை சுற்றி வந்த இவருக்கு அவரின் தந்தை குமார் புத்திமதி சொல்லி உள்ளார். இதன் பேரில் சரவணன் சென்னைக்கு சென்று ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சரவணன் தந்தை காலமானார். இந்த சோகம் சரவணனை வாட்டி வதைத்து வந்துள்ளது.

    சென்னையில் இருந்து விடுமுறைக்காக ஊர் திரும்பிய சரவணன், கீழபுலியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து உள்ளார். போதை தலைகேறிய நிலையில், அவருக்கு தந்தையின் நினைப்பு வந்துள்ளது. இதனால விரக்தி அடைந்த அவர் எழுமூர் பெருமாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கிணற்றுக்கு அடியில் உடல் சென்று விட்டதால் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலில் பேரில் அங்கு வந்த மங்களமேடு போலீசார்,வேப்பூர் தீயணப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில்பைக் மோதி முதியவர் பலி
    • இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 75). இவர் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் கோவிலில் மதியம் அன்னதானம் சாப்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அந்த வழியாக கடலூரை சேர்ந்த அவினேஷ்(வயது 75) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மீது பயங்கரமாக மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரெங்கசாமி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ரெங்கசாமி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் டிப்-டாப் உடையணிந்து வீடுகள் தோறும் செல்லும் ஆசாமிகளால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்
    • கியாஸ் செக்கிங் என்று வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் சரியாக உள்ளனவா? என சரி பார்க்க வந்திருக்கிறோம். இதற்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.250 என கூறி பொதுமக்களிடம் வீடு வீடாக சில டிப்-டாப் ஆசாமிகள் கேட்டு வருகின்றனர். வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் உண்மை என நம்பி ரூ.250 செலுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்று வரும் நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியானவர்களா? என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்தாக வேண்டும் என்ற பட்சத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இறக்கும் நபர்களுடன் வந்து இது போன்ற ஆய்வுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் குன்னம் பி.கே.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன் வரவேற்றார்.கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் பேசியதாவது,நாம் அனைவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அரசின் கனவு திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியது போல போல எனக்குப் பின்னாலும் 100 ஆண்டு காலம் கட்சியும், ஆட்சியும் இருக்கும் என கூறினார். அது தற்போது தொடர வேண்டும். அம்மாவின் வழியில் இன்றைக்கு எடப்பாடியார் கட்சியை வழி நடத்தி வருகின்றார்.தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்கக்கூடிய 32 டி எம் சி தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் கர்நாடாகாவில் ஆட்சி நடத்துகிறது. ஆனால் காவேரி தண்ணீர் பெற தமிழக மக்களுக்காக ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மும்மாரி மழை பெய்து விவசாயிகளின் துயர் துடைத்தும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து அதிகபடியாக திறந்து விட்டு டெல்டா விவசாயிகளின் காவலராக இருந்தவர் எடப்பாடியார். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்பி சந்திரகாசி, வழக்கறிஞர் கே.என் ராமசாமி, மாவட்ட எம் ஜிஆர் மன்ற செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் எம்எல்ஏ பூவைச் செழியன், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் முத்துசாமி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சந்திரகாசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னம் இளங்கோவன், சித்தளி நாகராஜ் குன்னம் ரங்கநாதன், அமுதா முருகேசன், குன்னம் கிளைச் செயலாளர்கள் மதியழகன், ராஜா, சடையாண்டி, மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஏ கே ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மொபட் மீது கார் மோதியது
    • கார் மோதி முதியவர் பலி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் தோப்பு தெருவை சோ்ந்தவர் சிங்காரவேல் (வயது 72). இவர் நேற்று காலை 11.15 மணியளவில் மொபட்டிற்கு பெட்ரோல் போட பாளையம் கிராமத்திற்கு சென்றார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியபோது எதிரே வந்த கார், மொபட் மீதுமோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரவேலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிங்காரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில்வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










    • பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
    • பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.

    மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை , யூனிஃபார்ம்ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள் பயிற்சிநேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயி ற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் கா லை,மாலை தேனீர்வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    ×