search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிமுறைகளை மீறிஇயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்
    X

    போக்குவரத்து விதிமுறைகளை மீறிஇயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்

    பெரம்பலூரில் ரூ.1.20 லட்சம் அபராதம்போக்குவரத்து விதிமுறைகளை மீறிஇயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர் ராஜாமணி மற்றும் குழுவினர், பெரம்பலூர் பகுதிகளில் வாகனத்த ணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியாருக்குச் சொந்தமான கார் மற்றும் வேன்களில் பள்ளிக் குழந்தைகளை மாத வாடகைக்கு அழைத்துச் சென்று வந்த 3 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்கப்ப டாத நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதிச்சான்று புதுப்பிக்கப் படாத சரக்கு வாகனம், வரி செலுத்தாத சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்க ளுக்கு இணக்கக் கட்டண மாக ரூ.1.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில்:- தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்ட றியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்க ளில் அதிக பயணிகளை ஏற்ற க்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. வாகனங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறை களை பின்பற்றி இயக்க வேண்டும். இது சம்பந்தமாக தினமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும் என்று அவர் எச்சரித்தார்.

    Next Story
    ×