என் மலர்
நீலகிரி
- சாலையின் குறுக்கே ஓடிவந்ததால் விபத்து
- திருமணம் ஆகி 10 மாதமே ஆவதால் குடும்பத்தினர் வேதனை
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராம் பகதூர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது.
இவர் பெட்போர்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இரவில் ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனம் மூலம் பித்தாப்பூர் பகுதியை ஒட்டி உள்ள கோத்தகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று ஓடி வந்தது. அதனை பார்த்த பிரேம்குமார் உடனடியாக பிரேக் பிடித்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது உடலை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகி 10 மாதமே ஆன பிரேம்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
- ஐம்பொன் உற்சவ சிலையை கோயிலுக்கு எடுத்து வந்து வழிபாடு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்பகம் அடுத்த மசினகுடியில் மசினியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் புராதன தலம் ஆகும்.
இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அப்போது அவர்கள் தங்களின் குலதெ ய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால், தாங்கள் வசிக்கும் பகுதியில் மசினியம்மனுக்கு கோயில் எழுப்பினர். அங்கு அவ ர்கள் அம்மனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலா கலமாக கொண்டாட ப்படும். அப்போது மசினியம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை நடக்கும்.
மசினக்குடி அம்மன் கோவி லில் தற்போது தசரா கொலு பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டா டப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் 4 அடி உயரம், 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது.
மேலும் தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரி யம்மன், சிறியூர் மாரி யம்மன், ஆணிகல் மாரிய ம்மன், சொக்கனல்லி மாரிய ம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய 6 சிலைகள், கருவறை யைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. மேலும் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் கோவில் வளாகம் இருக்கும். அப்போது ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். இதற்கான பூஜை நடக்கும்போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழுந்தால் பக்தர்களின் வேண்டு தலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்து விட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மசினக்குடி அம்மன் கோவிலிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மைசூரு தசரா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகி ன்றன. அதிலும் குறிப்பாக மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.அப்போது மாயார் சிக்கம்மன் கோவில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மசியம்மன் கோவிலை சென்ற டைவர். தொடர்ந்து நடக்கும் திருத்தேர் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்.
அன்றைய தினம் ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்தடையும்.
மசினகுடியில் நடந்த தசரா விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் மசினகுடி மசினிய ம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா கொலு திருவிழா தொடங்கியது. இதற்காக மாயார் சிக்க ம்மன் கோவிலில் இருந்து சிக்கம்மனை பழ ங்குடி மக்கள் ஊர்வ லமாக, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்கா ரத்துடன் கொலு வைத்து, தசரா விழா தொட ங்கியது.
கடைசி நாளான நேற்று நடந்த விழாவில் மசினி யம்மன் சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.
- மலை ரெயிலில் குடும்பத்துடன் உற்சாக பயணம்
- வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், வானுயர ஓங்கி வளர்ந்து காணப்படும் மலைகள்-மரங்களும், வெள்ளியை உருக்கினாற்போல விழும் நீர்வீழ்ச்சிகளும், அழகிய புல்வெளிகளும் காண்போரை கவர்ந்து இழுக்கும் வனப்புடன் திகழ்கின்றன. எனவே அங்கு சுற்றுலா பயணி களின் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.
தமிழகத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறைகள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலம்- மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க குடும்பத்துடன் திரண்டு வந்து உள்ளனர்.அவர்கள் ஊட்டி மற்றும் சுற்றுலா தலங்களில் நிலவும் குளு குளு சீசனை அனுபவித்து வருகின்றனர். அங்கு உள்ள மிகப்பெரிய புல்வெளிகளில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உலக புகழ்பெற்ற மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டு வர். எனவே மலைரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய எப்போதுமே கூட்டம் அலைமோதும்.
இதை கருத்தில் கொண்டு கோடை சீசனுக்கு இணையாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி மலை ரெயில் இயக்கபட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். செல்லும் வழியில் உள்ள குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் எண்ணற்ற சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்து அங்கு உள்ள இயற்கை காட்சிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து கண்ணடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் அழகிய மலர் அலங்காரங்களை நேரில் கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டி ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.
பின்னர் தென்னிந்தியா வின் மிக உயர்ந்த மலை சிகரம் தொட்டப்பெட்டா வுக்கு சென்று அங்கு இருந்த இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு, கோத்தகிரி, கேத்தரின் நீர்வீழ்ச்சி, குன்னூர் டால்பி ன்நோஸ், லேம்ஸ்ராக், கூடலூர் தவலைமலை, முதுமலை புலிகள் சரனா லம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு காரண மாக நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே அங்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் அனைத்துசாலைகளிலும் வாகன நெரிசலை சீர்படுத்தி வருகின்றனர்.
ஊட்டியில் தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியுடன் வலம்வருகின்றனர்.
நீலகிரியில் அதிகளவில் சுற்னுலா பயணிகள் குவிந்து உள்ளதால் அங்கு உள்ள தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. மேலும் விடுதி ஊழியர்கள் அதிக வாடகை கேட்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
- பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்தது
- ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இல்லாததால் பெரும் ஆபத்து தவிா்ப்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
காட்டுக்குள் தற்போது வறட்சி நிலவுகிறது என்பதால் அங்கு உள்ள வனவிலங்குகள் அடிக்கடி காட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து அங்கு இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
காட்டுக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் வனவிலங்குகளை தடுத்து நிறுத்தும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.
கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பாா்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவில் காட்டு யானைகள் திரண்டு வந்தன.
அப்போது அவை சுகாதார நிலையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நோயாளி களின் படுக்கை மற்றும் மேஜை-நாற்காலிகளை உடைத்து சூறையாடின.
தொடர்ந்து ஆஸ்பத்திரி யின் பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்த யானைகள், அதில் இருந்த மருந்துகள், பதிவேடுகள் உள்பட அனைத்துப் பொரு ட்களையும் சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்தன.சுகாதாரநிலைய பணியா ளா்கள் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது காட்டு யானைகள் ஆஸ்பத்திரியை சூறையாடிய விவரம் தெரியவந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த ஊழி யர்கள், இதுகுறித்து சம்ப ந்தப்பட்ட உயரதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனா்.
மேலும் தகவலறிந்த வனத்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு சேதமதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காட்டு யானைகள் புகுந்தபோது, அங்கு நோயாளிகள் எவரும் இல்லை. எனவே அங்கு அதிா்ஷ்டவசமாக பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.
கூடலூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம், பணியாளா்களி டம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அருவங்காடு:
தொடர் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பாரவையிட்ட அவர்கள் நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.
அதன்படி இரவு ஊட்டியில் இருந்து அவர்கள் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. பர்லியார் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி ஓடியது. பள்ளத்தில் இருந்த பெரிய மரத்தில் பஸ் மோதி நின்றது. அந்த இடத்தில் மரம் இருந்ததால் பஸ்சை தாங்கி பிடித்துக்கொண்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பஸ்சில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். யூனுஸ்கான் என்ற 13 வயது சிறுவன் பஸ்சின் கதவில் சிக்கி தவித்தான். அவனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுவன் யூனுஸ்கான் கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ் உடனடியாக மீட்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் கல்லட்டி மலை பாதையில் போடப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் போன்று இந்தச் சாலையிலும் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். குன்னூர் டி.எஸ்.பி. குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தற்போது விபத்து நடந்துள்ள இடம் அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் அதன் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.
- பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார்
- 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை, சூறாவளி காற்று. நிலச்சரிவு. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே தீயணைப்பு. வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு இக்கட்டான நேரங்களில் உதவியாக செயல்படுவதற்காக குன்னூரில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் சமுதாய பங்களிப்பின் அவசியம் குறித்த பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களுக்கு கோட்டாட்சியர் பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் ஆய்வு
- பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தல்
ஊட்டி,
பாலகொலா ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக மைனலைமட்டம் பஜார் பகுதியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் நடக்கிறது.
இதனை பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்போது மைனலைமட்டம் வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் கார்த்திக், ஒப்பந்ததாரர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
- முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மேல்நிலை பள்ளி மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார்
- வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது
ஊட்டி,
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மசினகுடி பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் திடீரென ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள மேல்நிலை பள்ளிக்கு சென்று மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவருடன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஒன்றிய கவுன்சிலர் உத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 4 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து
- உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 20 ஆலைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் தரமாக தயாரிக்க வேண்டும் எனவும், கலப்பட தேயிலை தூள்கள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் கலப்பட தேயிலை தூள் குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது பொது மக்கள் இடையேயும், தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளின் அளவை கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுபோல் தேயிலை வாரிய உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 20 தொழிற்சாலைகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் நான்கு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் மூன்று மாதத்திற்கு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடப்பட்டது
- சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் கால்நடை மருந்தக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
முகாமில், கால்நடைக ுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது.
இதுதவிர சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறு கண்காட்சி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் 3 பேருக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான பரிசுகளை 3 பேருக்கும், 10 பயனாளிகளுக்கு மினரல் மிக்சர் பாக்கெட்டுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பாராட்டி னார்.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பகவத்சிங், முதன்மை நோய் நிகழ்வியல் அலு வலர் டாக்டர்.சத்திய நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் டாக்டர்.எஸ்.பார்த்தசாரதி(ஊட்டி), டாக்டர்.நீலாவண்ணன்(கூடலூர்), பேராசிரியர் மற்றும் தலைவர், எஸ்.பி.ஆர்.எஸ் சாண்டி நல்லா டாக்டர்.என்.பிரேமா, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.எம்.நாகஜோதி (சோலூர்), டாக்டர்.எம்.ராஜமுரளி (ஊட்டி), டாக்டர். ஏ.பொன்கலையாணி (ஊட்டி), மருதனிராஜ் (தலைகுந்தா),டாக்டர்.மேஜர் கணேஷ் (டி-ஆர்.பஜார்). சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
- கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்கான அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். திராவிட தமிழர் கட்சி செயலாளர் வெண்மணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக
நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில்ரவி, காந்தல்ரவி, செந்தில்நாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, முரளிதரன், பத்மநாபன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், அசார்கான், சந்திரகுமார், மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, மேத்யூஸ், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பவீஷ் நன்றி கூறினார்.






