search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மசினகுடி மசினியம்மன் கோவிலில் தசரா திருவிழா
    X

    மசினகுடி மசினியம்மன் கோவிலில் தசரா திருவிழா

    • திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
    • ஐம்பொன் உற்சவ சிலையை கோயிலுக்கு எடுத்து வந்து வழிபாடு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்பகம் அடுத்த மசினகுடியில் மசினியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் புராதன தலம் ஆகும்.

    இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அப்போது அவர்கள் தங்களின் குலதெ ய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால், தாங்கள் வசிக்கும் பகுதியில் மசினியம்மனுக்கு கோயில் எழுப்பினர். அங்கு அவ ர்கள் அம்மனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலா கலமாக கொண்டாட ப்படும். அப்போது மசினியம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை நடக்கும்.

    மசினக்குடி அம்மன் கோவி லில் தற்போது தசரா கொலு பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டா டப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் 4 அடி உயரம், 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது.

    மேலும் தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரி யம்மன், சிறியூர் மாரி யம்மன், ஆணிகல் மாரிய ம்மன், சொக்கனல்லி மாரிய ம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய 6 சிலைகள், கருவறை யைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. மேலும் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் கோவில் வளாகம் இருக்கும். அப்போது ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். இதற்கான பூஜை நடக்கும்போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழுந்தால் பக்தர்களின் வேண்டு தலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்து விட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மசினக்குடி அம்மன் கோவிலிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மைசூரு தசரா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகி ன்றன. அதிலும் குறிப்பாக மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.அப்போது மாயார் சிக்கம்மன் கோவில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மசியம்மன் கோவிலை சென்ற டைவர். தொடர்ந்து நடக்கும் திருத்தேர் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்.

    அன்றைய தினம் ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்தடையும்.

    மசினகுடியில் நடந்த தசரா விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    மேலும் மசினகுடி மசினிய ம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா கொலு திருவிழா தொடங்கியது. இதற்காக மாயார் சிக்க ம்மன் கோவிலில் இருந்து சிக்கம்மனை பழ ங்குடி மக்கள் ஊர்வ லமாக, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்கா ரத்துடன் கொலு வைத்து, தசரா விழா தொட ங்கியது.

    கடைசி நாளான நேற்று நடந்த விழாவில் மசினி யம்மன் சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×