search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wildebeest"

    • சாலையின் குறுக்கே ஓடிவந்ததால் விபத்து
    • திருமணம் ஆகி 10 மாதமே ஆவதால் குடும்பத்தினர் வேதனை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராம் பகதூர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது.

    இவர் பெட்போர்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இரவில் ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனம் மூலம் பித்தாப்பூர் பகுதியை ஒட்டி உள்ள கோத்தகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று ஓடி வந்தது. அதனை பார்த்த பிரேம்குமார் உடனடியாக பிரேக் பிடித்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரது உடலை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் ஆகி 10 மாதமே ஆன பிரேம்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
    • வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் காட்டெ ருமைகள் முகாமிடுவதும், நகர் பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலும் விவசாய நிலங்க ளில் காட்டெரு மைகள் புகுந்து விவசாய நிலங்களை யும், பயிர்களையும் சேத ப்படுத்து வதுடன் விவசாயிகளையும் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.

    இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களான அண்ணாசாலை, பஸ் நிலையம், ஏழுரோடு சந்திப்பு உள்ளிட்ட இட ங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்ட மாக உலா வந்ததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறை யினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காட்டெ ருமைகளை வனப்பகுதி க்குள் விரட்டிச் சென்றனர். கடந்த சில தினங்களாக பொதுமக்களையும், கால்ந டைகளையும் காட்டெரு மைகள் தாக்கி வருகின்றன.

    எனவே வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் உலா வருவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். காட்டெருமைகள் நகர்பகுதி க்குள் வருவதை கண்கா ணிக்க கூடுதலாக வனப்ப ணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×