என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு இயக்கப்படுகிறது. இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார் கள். ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி படகுகளை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக 26 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதில் டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களை தத்ரூபமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்து உள்ளன. மேலும் கைப்பிடியுடன் கூடிய துடுப்பு படகுகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக புது படகுகளை இயக்க அனுமதி இல்லாததால் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சென்னை சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் புதிய படகுகளின் தரத்தை ஆய்வு செய்து இயக்க சோதனை ஓட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று சில புதிய படகுகள் சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்பட்டது. புதிய படகுகளில் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சவாரி செய்தனர். 2 இருக்கைகள், 4 இருக்கைகளை கொண்ட படகுகள் தண்ணீரில் சமநிலை யில் செல்கிறதா, மிதிக்கும் போது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. எளிதில் திரும்புகிறதா என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக புதிய படகுகளில் தண்ணீர் நிரப்பி எடை சரிபார்க்கப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது கற்றுலா பயணிகளின் டிராகன், மயில் படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய படகுகளை இயக்க அனுமதி கிடைத்ததும் அனைத்து படகுகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த 31-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நேற்று ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயில் மூலம் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. தண்டவாளம் மீது மண் மற்றும் கற்கள் விழுந்ததால் அதில் உள்ள பல்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு இருந்தது. அதை அகற்றிவிட்டு புதிய பல் சக்கரங்கள் பொருத்தப்பட்டன.
பிறகு அங்கு சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டு இருந்த இடத்தில் ரெயில் வெற்றிகரமாக சென்றது. இதனை தொடர்ந்து நேற்று குன்னூரில் இருந்து 4 காலி பெட்டிகளுடன் மலை ரெயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தண்டவாளத்தில் சரிந்து கிடந்த மண் அகற்றப்பட்டு, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எனவே ஊட்டி மலை ரெயில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் இயக்கப்படும் என்றனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் குன்னூர் வழியாக காலை 11.55 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதும், சாலைகளில் சிறிது மண்சரிவுகள் ஏற்படுவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.15 மணிக்கு ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு மலைரெயில் குன்னூருக்கு புறப்பட்டது. மாலை 3.30 மணியளவில் குன்னூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்த மலைரெயில் நீராவி என்ஜினை மாட்டி கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட தயாரானது.
அந்த சமயம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழைக்கு ஹில்குரோவ்- கல்லாறு ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி அங்கிருந்த ஊழியர்கள் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ரெயில் புறப்பட்டு விட்டது. உடனடியாக மலைரெயில் கார்டுக்கு தகவல் கொடுத்து மலைரெயில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மண்சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகி விட்டதால் தற்காலிகமாக பணியை நிறுத்தினர்.
பின்னர் பாதி வழியில் நிறுத்தப்பட்ட ஊட்டி மலைரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு சுற்றுலா பயணிகள் பஸ் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் மணல், கற்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் இன்று ஒரு நாள் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைரெயில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இன்று காலையும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
ஊட்டியில் பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், பாரதீய ஜனதா செயற்குழு உறுப்பினருமான ராதாரவி கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரதீய ஜனதா நல்ல கட்சி என்பதாலும், இந்த கட்சியில் பிரச்சினைகள் இல்லாததாலும் நடிகர்கள் பாரதீய ஜனதா நோக்கி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இருக்குமா, இல்லையா? என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
பாரதீய ஜனதாவுக்கு சிறந்த தலைமை மோடி. பாரதீய ஜனதா தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளும். அவர்கள் அரசியல் அறிந்தவர்கள்.
இரட்டை இலை சின்னத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த கூட்டணிக்கு தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு நிச்சயம் உண்டு.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் பனிமூட்டம் நிலவியது.
தொடர் மழை காரணமாக ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4,202 ரகங்களை சேர்ந்த 32 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் செடிகளில் ரோஜா மலர்களின் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் தண்ணீரில் நனைந்து அழுக தொடங்கி உள்ளன.
இதனால் செடிகளில் ரோஜா மலர்கள் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. அழுகிய மலர்களை பணியாளர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கோடை சீசனையொட்டி பூங்காவின் ஒரு பகுதியில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் மட்டும் மலர்கள் இருந்த நிலையில், தொடர் மழையால் தற்போது அங்கும் மலர்கள் குறைவாக இருக்கிறது. பூங்காவை சீசனுக்கு தயார்படுத்துவதற்காக கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடுவது, களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, புரூக்கோலி, பூண்டு போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மலைக்காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் உள்ளூரில் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ஓசூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், பட்டாணி, புரூக்கோலி, பூண்டு, கேரட் ஊட்டிக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது.
குறிப்பாக புரூக்கோலி ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை யானது. ஆனால் அது தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்கப்படுகிறது. நீலகிரியில் விளையும் காய்கறிகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. ஆனால் வெளியிடங்களில் இருந்து காய்கறிகள் அதிகம் வருவதால் உள்ளூரில் விளைவிக்கும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.
தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.37, முள்ளங்கி ரூ.10, பீட்ரூட் ரூ.38, பட்டாணி ரூ.60, கேரட் ரூ.12-க்கு விற்பனை யாகிறது. இதனால் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






