என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி பஸ் நிலையத்தில் தவற விட்ட ரூ.2¼ லட்சம் முதியவரிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்9 Jan 2021 4:21 PM GMT (Updated: 9 Jan 2021 4:21 PM GMT)
ஊட்டி பஸ் நிலையத்தில் ரூ.2¼ லட்சத்தை தவறவிட்ட முதியவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை கிடந்தது. அதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அஜிதாகுமாரி என்ற பெண் போலீஸ் கண்டெடுத்தார். அதற்குள் பார்த்தபோது ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது. ஆனால் அதை தவறவிட்டு சென்றது யார் என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊட்டி அருகே சோலூரில் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 75) என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரிய வந்தது.
இவர் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை தனது நண்பர் உதவியுடன் எடுத்தார். அப்போது வீட்டிற்கு செல்ல பஸ்நிலையத்துக்கு வந்தபோது பணம் வைத்திருந்த பை தவறி கீழே விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நஞ்சனை போலீஸ் நிலையம் வரவழைத்து, அவரிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X