search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காபி செடியில் காய்த்துள்ள பழங்களை படத்தில் காணலாம்.
    X
    காபி செடியில் காய்த்துள்ள பழங்களை படத்தில் காணலாம்.

    மஞ்சூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

    மஞ்சூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக இருப்பது பச்சை தேயிலை. இருந்தபோதிலும் மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள கைக்காட்டி, மஞ்சக்கம்பை, பெங்கால் மட்டம், குந்தா, கீழ்குந்தா, மேல் குந்தா, கிண்ணக் கொரை, எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்து உள்ளனர்.

    இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் அறுவடை காலமாக உள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள காபி செடிகளில் விளைச்சல் உள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் பூத்து கிடக்கின்றன. எனவே விவசாயிகள் காபி பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    இது குறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-

    மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து இருப்பதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இந்த காபியை மே மற்றும் டிசம்பர் என வருடத்துக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை தொடங்கியதும் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். அந்த வகையில் நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்ச மாக ஒருமுறை 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இந்த பழங்களை வாங்கி செல்லும் விவசாயிகள், அதன் தோலை நீக்கி உலர வைத்து காபி கொட்டைகளை தயாரித்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

    இப்படி காபி பொடி தயாரிக்கும்போது ஒரு கிலோ காபி பொடிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை கிடைக்கும். தற்போது காபி விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×