என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நடிகர் ராதாரவி பேட்டி
ஊட்டி:
ஊட்டியில் பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், பாரதீய ஜனதா செயற்குழு உறுப்பினருமான ராதாரவி கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரதீய ஜனதா நல்ல கட்சி என்பதாலும், இந்த கட்சியில் பிரச்சினைகள் இல்லாததாலும் நடிகர்கள் பாரதீய ஜனதா நோக்கி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இருக்குமா, இல்லையா? என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
பாரதீய ஜனதாவுக்கு சிறந்த தலைமை மோடி. பாரதீய ஜனதா தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளும். அவர்கள் அரசியல் அறிந்தவர்கள்.
இரட்டை இலை சின்னத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த கூட்டணிக்கு தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு நிச்சயம் உண்டு.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்