என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் - கருணாகரன் தலைமையில் நடந்தது
Byமாலை மலர்8 Jan 2021 9:37 AM GMT (Updated: 8 Jan 2021 9:37 AM GMT)
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் கருணாகரன் தலைமையில் நடந்தது.
ஊட்டி:
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனரும், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான கருணாகரன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி தகுதி வாய்ந்த எந்த வாக்காளரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட கூடாது. அதேபோல் தகுதி இல்லாத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற கூடாது.
இதனை முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
பெயர் நீக்கம் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தேர்தல் பிரிவு தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா, சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X