என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே சூண்டியில் அம்மா மினி கிளினிக் - கலெக்டர் திறந்து வைத்தார்
Byமாலை மலர்9 Jan 2021 4:24 PM GMT (Updated: 9 Jan 2021 4:24 PM GMT)
கூடலூர் அருகே சூண்டியில் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.
கூடலூர்:
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி துணை சுகாதார நிலையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் சாந்தி ராமு எம்.எல்.ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை குழு தலைவர் கே.ஆர்.அர்ஜுனன், மாவட்ட ஆவின் தலைவர் மில்லர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து நல பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓவேலி பேரூராட்சி சூண்டி துணை சுகாதார நிலையத்தில் 4- வது மினி கிளினிக் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய சூண்டி, காந்திநகர், மரப்பாலம், செல்வபுரம், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
சர்க்கரை பரிசோதனை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அம்மா மினி கிளினிக்கில் பரிசோதனை செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான அம்மா மினி கிளினிக்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், சுகாதார துணை இயக்குனர் பாலு சாமி, தாசில்தார் தினேஷ், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன், ஒன்றிய செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் சையத் அனுப்கான் உள்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பந்தலூர் அருகே உள்ள சிங்கோனாவில் நடந்த விழாவில் மாவட்ட துணை இயக்குனர் பாலுசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அம்மா மினிகிளினிக்கை தொடங்கி வைத்தார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர்கள் தர்மலிங்கம், ராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X