என் மலர்
நீலகிரி
- வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன.
- காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடித்த வண்ணம் உள்ளது.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் முள்ளூர் பகுதியை சுற்றியுள்ள பலா தோட்டங்களில் பலாப்பழங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இதனால் இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன. மாதக்கணக்கில் அப்பகுதியிலேயே சுற்றிவந்த காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.
பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில் இப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை பார்க்க வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்ற னர்.
இதேபோல் நேற்று மாலை முள்ளூர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை படம்பிடிக்க சுற்றுலா பயணிகள் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி யானையின் மிக அருகில் சென்றனர். அந்த யானை அவர்களை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.
சுற்றுலா வரும் பயணிகள் எந்த இடங்களில் யானைகள் இருக்கிறது என்பது தெரியாமல் சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றிப்பார்க்க சென்று விடுகின்றனர். எனவே யானைகள் உலா வரும் இது போன்ற பகுதிகளில் வன பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் மூலதன மானிய நிதிதிட்டத்தின் கீழ் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சமும் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பில் 35 மீட்டர் நீளம் மற்றும் 5.15 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியினையும், வேடன் வயல் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், தலைகுந்தா, கல்லட்டி, தெப்பக்காடு சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.199 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷன், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, கூட லூர் வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுரதுல்லா, கூடலூர் நகராட்சி ஆணை யாளர் பிரான்சிஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பொறியாளர் ஆல்துரை, கூடலூர் தாசில்தார் சித்த ராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
- புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியை ஒட்டிய வனப்பகுதி தமிழ்நாடு கர்நாடகாவை இணைக்கும் ஒரு முக்கிய வனப்பகுதியாக உள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.
காட்டு எருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையான ஒன்று.
ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய புலியின் நடமாட்டம் கோத்தகிரி கோடநாடு வனப்பகுதியில் தற்போது தென்பட்டுள்ளது.
நேற்று மாலை அப்பகுதியில் நிலஅளவை பணிசெய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணிமுடிந்து வரும் போது சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனை ஊழியர் ஒருவர் தனது செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அந்த பகுதியில் பரவி வருகிறது. புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
- கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
குன்னூர்,
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார். கீழ் கோத்தகிரி மேநாடு பகுதியில் உள்ள இவரது எஸ்டேட்டுக்குச் செல்லும் வழியில் வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், ரோடு ரோலர் மற்றும் பொக்லைன் டிரைவர்களான உமர் பரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர்.
இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணியின்போது தான் அந்த இடத்தில் இல்லை என்றும், தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், தோட்ட உரிமையாளரும் சுற்றுலாத் துறை அமைச்சரின் மருமகனுமான சிவகுமார் வனத்துறையினரின் விசாரணையில் விளக்கம் அளித்திருந்தார்.
கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில் கோத்தகிரி நீதிமன்றத்தில் சிவகுமார் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் கோரினார். அவருக்கு கோத்தகிரி நீதிபதி வனிதா முன்ஜாமீன் வழங்கினார்.
- சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி, மசினகுடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலாவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.38 லட்சம் மதிப்பீட்டில், தலைக்குந்தா மெயின் ரோடு முதல் எம்.ஜி.ஆர் நகர் வரை சிமெண்ட் நடைபாதை மற்றும் சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணிகனளயும், ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில், எம்.ஜி.ஆர் நகர் சலீமா வீடு முதல் மோகன் வீடு வரை முடிக்கப்பட்ட நடைபாதை பணியினையும், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கெம்பலை மெயின் ரோடு முதல் கெம்பலை கிராமம் வரை நடைபெற்று வரும் பணிகளையும், சிமெண்ட் நடைபாதை பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கல்லட்டி பகுதியில் ரூ.14.44 இலட்சம் மதிப்பீட்டில்,பால் உற்பத்தியாளர் சங்கம் கட்டட பணியினையும், பி.ஜி.எப் திட்டத்தின் கீழ், கல்லட்டி பால் உற்பத்தியாளர் சங்கம் அருகில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் கல்வெட்டு பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,கல்லட்டி மெயின் ரோடு முதல் தகன எரியூட்டும் மைதானம் வரை ரூ.7.71 இலட்சம் மதிப்பீட்டில், முடிக்கப்பட்ட சாலை பணியினையும், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி ஊராட்சியில், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில், வாழைத்தோட்டம் பகுதியில், சமுதாய சுகாதார வளாக கட்டுமான பணிகளையும் பார்வையிட்டும், பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையினையும் மற்றும் மசினகுடி சாலை பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சோக்பிட் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஆக மொத்தம் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி கெம்பலை கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் 51 குடியிருப்புகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்நோஷ் குமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா்.
- பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஊட்டி,
நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா். நாடுகாணி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற ஆ.ராசா, நெல்லியாளம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.
இதையடுத்து புளியம்பாறை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் புளியம்பாறை கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த கல்யாணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினாா்.
தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மஞ்சமூலா கிராமத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.
பின்னா் பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கம்பாடி கிராமம், ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி, பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்பட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
- நண்பர்கள் 2 பேரும் மதுகுடித்து விட்டு வந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (வயது 33), பிரசாந்த் (23). இவர்கள் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பீர் பாட்டிaலால் பிரசாந்தை தாக்கினார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர்
- நீண்ட நேரம் போராடியும், பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை
குன்னூர்,
குன்னூர் டானிக் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அந்த வலையில் சாரைப்பாம்பு சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் போராடியும், அந்த பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை. இதையடுத்து பாம்பு மயங்கிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் யஸ்வந்த் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் சாரைப் பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். எனவே, தேவையில்லாத பொருட்களை மரங்களில் வைக்க வேண்டாம். அது பறவைகள், சில உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.
- தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் மேடநாடு என்ற இடத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.
சிவக்குமார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகன் ஆவார்.
இந்த நிலையில் இவரது தோட்டத்திற்கு சாலை இணைப்ைப ஏற்படுத்தும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 2 கி.மீ தூர தொலைவுக்கு சாலை பணி நடந்தது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.
மேலும் தோட்ட மேலாளர் பாலமுருகன், கனரக வாகன டிரைவர்கள் உமர் பாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்கிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக ஏற்கனவே 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தோட்ட உரிமையாளரும், அமைச்சரின் மருமகனுமான சிவக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, மேடநாடு காப்புக்காட்டில் விதிகளை மீறி சாலை அமைத்ததற்காக தோட்ட உரிமையாளரான சிவக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிவக்குமாரை முதல் குற்றவாளியாக சேர்த்து ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
- தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
- தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கரக்கோடு மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
அப்போது எதிர் பாராதவிதமாக குட்டி பாறை இடுக்கில் சிக்கி கொண்டது. இதனை கண்ட தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டியை மீட்டு தாய் கரடியுடன் சேர்த்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாய்கரடியின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.
- ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.
ஊட்டி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நீலகிரியில் உள்ள காவலர் சிறார் மன்றத்தில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணை நடத்தப்பட்டது.
பெட்டிசன் மேளாவில் நிலவையில் இருந்த குடும்ப பிரச்சினை, பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக உள்ள மனுக்கள் மீது மறு விசாரணை செய்து தீர்வு காண நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் பெட்டிசன் மேளாவுக்கு வந்த கணவன், மனைவி 2 பேருக்கும் அறிவுரைகளை வழங்கி, அவர்களுக்கிடையேயோன பிரச்சினையும் தீர்த்து வைக்கப்பட்டது.இந்த பெட்டிசன் மேளாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன், தம்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், நாம் பிறப்பது ஒரு முறை, இறப்பது ஒரு முறை தான்.
வாழ்வது ஒரு முறை தான். நாம் இறந்தால் எதையும் கொண்டு போவது இல்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒருவ ருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
அவரின் அறிவுரையை அடுத்து அண்ணன் தம்பி 2 பேரும் சேர்ந்து கொண்ட னர். வரும் போது தனித்தனியாக வந்தவர்கள், போகும் போது அண்ணன், தம்பி 2 பேரும் ஒரே காரில் ஏறி சென்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது அன்பால் பொதுமக்களை அரவணைத்து அறிவுரைகளை கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.
- நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஊட்டி,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ''அரசு பள்ளி களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நகராட்சியில் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் உள்ளன.
நீலகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. ஊட்டி ஏ.டி.சி பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சர்வ சிக்ச அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜூனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு வாகனம் இம்மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விழிப்புணர்வு வாகனம் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அரசு பள்ளிகளில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொள் ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளை யாட்டுப்போட்டிகள், வானவில் மன்ற போட்டி கள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1000 கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படும்.இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதே ஆகும். எனவே பொதுமக்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்துபயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் ஊட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் எழிலரசன், விஜயராஜ், ஜமுனா ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ஜெகதீஸ்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வியின் மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






