குன்னூரில் வலையில் சிக்கி தவித்த பாம்பு மீட்பு

வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர் நீண்ட நேரம் போராடியும், பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை
குன்னூரில் வலையில் சிக்கி தவித்த பாம்பு மீட்பு
Published on

குன்னூர்,

குன்னூர் டானிக் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அந்த வலையில் சாரைப்பாம்பு சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் போராடியும், அந்த பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை. இதையடுத்து பாம்பு மயங்கிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் யஸ்வந்த் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் சாரைப் பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். எனவே, தேவையில்லாத பொருட்களை மரங்களில் வைக்க வேண்டாம். அது பறவைகள், சில உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com