என் மலர்
நாமக்கல்
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது.
- தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக பரமத்தி போலீசாருக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது புலவர் பாளையத்தை சேர்ந்த லிங்கம் (வயது 48), நாமக்கல் அருகே முதலைப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி (40) ஆகிய இருவரும் சேர்ந்து புலவர்பாளையத்தில் சூதாட்ட கிளப் நீண்ட காலமாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 29 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 21 ஆயிரம் மற்றும் 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97½ குவிண்டால் எடை கொண்ட 16 ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.
அதேபோல் 363.49½ குவிண்டால் எடை கொண்ட 765 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 95ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.
- எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 முதல் 50 வயது வரை இருக்கும். பச்சை நிற கை வைத்த பனியனும், நீல நிற வெள்ளை கோடு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
- தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் பிடில்முத்து தெரு வை சேர்ந்தர் பாதுஷா. இவரது மகன் சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
பரிதாபமாக இறந்தார்
இந்த நிலையில் நேற்று சாகில் அலங்காநத்தம் சென்று விட்டு தனியார் பஸ்சில் நாமக்கல் நோக்கி வந்தார். தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
இதில் பலத்தகாயம் அடைந்த சாகில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் மீது வழக்கு
இது குறித்து அவரது தந்தை பாதுஷா நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இளைஞர் பஸ்சில் இருந்து வெளியே விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
- வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவரது மகள் மோகனா.
மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
திருட முயற்சி
இந்த நிலையில் மோகனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் செல்வராஜ் தனது காரில் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு மீண்டும் வேலகவுண்டம்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் திருடர்கள் திருடர்கள் என சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தார். அப்போது அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.
போலீசார் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை புதிய பெருங்களத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர் (25), திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பாரதி நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் யாழின் (23), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் அஸ்வின் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் திருவள்ளுவர் நகரில் மோகனா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
ஜெயிலில் அடைப்பு
அதனையடுத்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர், யாழின், அஸ்வின் ஆகிேயாரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
- இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.
நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.
நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.
- விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
- தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சாணார்பாளையத்தை சேர்ந்த விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
வழிபாடு
நிலத்துக்கு மேல் 8 அடி உயரமும், அதன் அடியில் 3 அடி உயரமும் கொண்டு அமைந்துள்ளது. பிரம்ம சூத்திரக் குறியீட்டுடன் காவிரி கரையை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. தினமும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் நில உரிமையாளர் அனுமதி யுடன் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்தில் வைக்க முற்பட்டனர். வருவாய் துறையினர் சிவலிங்கத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற தடை போட்டுள்ளனர்.
தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர். பிரதோஷ நாட்களிலும் முக்கிய விசேஷ தினங்களிலும் அங்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
6-ம் நூற்றாண்டு
இது குறித்து சிவனடியார்கள் கூறியதாவது:-
முற்காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திர குறியீடை வைத்து பார்க்கும்போது, 6-ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சிவலிங்கம் ஆந்திர மாநிலம் குடிமல்லம் பழமையான லிங்கத்தை போன்றே உள்ளது. லிங்கத்தின் மேற்பகுதி தட்டையாக உள்ளது. அதனால் இது பல்லவர் காலத்து சிவலிங்கமாக இருக்க வாய்ப்புள்ளது. கரும்பு காட்டிற்குள் இருப்பதால் விளக்கு ஏற்றி வழிபடும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பாதுகாப்பான வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக வருவாய்த் துறையினர் அனுமதி தரவில்லை. எனவே சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி தெரிவிக்கையில் சிவலிங்கத்தை இடமாற்றம் செய்வதற்கு பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி பெற்ற பிறகு தான் மாற்ற முடியும் என்றார்.
- சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
- சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (23). இவர் கடந்த 1 1/2 ஆண்டாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மன்னா வீதியில் தங்கி கட்டிடம் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வருகிறார். புகழேந்திரனின் உறவினரின் 15 வயது மகள் ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியின் தாயார் குமாரபாளையம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி குமாரபாளையம் அழைத்து வந்து புகழேந்திரன் கட்டாய திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதற்கு சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை செய்து புகழேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.89 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த நவம்பர் 5-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.25-ல் இருந்து 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.30 ஆனது. 6-ந் தேதி மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.35 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.89 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.98 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
- இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சேளூர், கொந்தளம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், கள்ளிப்பாளையம், கொத்த மங்கலம், கபிலக்குறிச்சி, கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லி கோவில், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை ஒன்றிய பகுதிக ளில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சந்தை
ஆலைகளில் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பா ளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3000 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் சிப்பம் ரூ.1,400
சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தால் அறிவிக்கப்பட்ட 3,359 பணிக்காலியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இதன் அடிப்படையில், இத்தேர்விற்கான மாதிரித் தேர்வு இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பாடவாரியாவும், முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலா கவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.
எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த நாமக்கல் மாவட்ட விண்ணப்ப தாரர்கள் அனைவரும் இம்மாதிரித் தேர்வினில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
- வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.500
வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.
இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.
நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






