என் மலர்
நாமக்கல்
- ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது.
- ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம்:
திருப்பூர், பல்லடம், சோமனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கலர்நூல்களை பயன்படுத்தி தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைதறிகளில் அனைத்து ரக ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் கழிவு பஞ்சு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திருப்பூர், பல்லடம், சோமனுர் ஆகிய பகுதியில் செயல்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்களில் நேற்று முதல் 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
- தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.
- தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் ஒரு டேங்கர் லாரி, 2 சரக்கு லாரிகள் என 3 லாரிகளை அதன் டிரைவர்கள் நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதில் ஒரு லாரியில் காட்டன் துணி வகைகள் லோடு இருந்தது. மற்ற 2 லாரிகளில் சரக்குகள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென 3 லாரிகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அப்பகுதியில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து பேலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
வாழைகள் வெட்டி சாய்ப்பு
அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகன்யா, பரமத்தி வேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி (பரமத்தி வேலூர்), ரவி (பரமத்தி), செல்வராஜ் (வேல கவுண்டன்பட்டி) மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி,வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் பதிவான பதிவுகளை வைத்தும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜேடர்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் யாராவது வாழை மரம் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன.
- தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகள் சுமார் 20 டன் அளவுக்கு நகராட்சி தூய்மை பணி யா ளர்கள் அகற்றினர். மேலும் மாரி யம்மன் கோவில் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட குப்பைக ளை யும் அகற்றினர்.
- நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
- பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை களை சேந்த மங்கலம் சாலை முதலைப்பட்டி, கொச வம்பட்டி ரோஜாநகர் ஆகிய பகுதி களில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நுண்ணுயிர் செயலாக்கம் மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படு கின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப் பட்டு தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகின்றன.
5 டன் குப்பைகள் தேக்கம்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நாமக்கல் நகராட்சியில் பொதுமக்கள் கோலாகலமாக கொண்டா டினர். இதில் பட்டாசு வெடித்ததில் குப்பைகள் குவிந்தது.
இதையடுத்து பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் நாள்தோறும் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 5 டன் பட்டாசு கழிவுகள் தேங்கியது. இவைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலைகளில் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
- உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
1050 கிலோ பறிமுதல்
இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர் மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன் சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.
- மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகள், வெல்ல ஆலையில் இருந்த குடியிருப்புகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, வீடுகள் மீது மண்எண்ணை பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும், ஆயிரக்கணக்கான பாக்கு, வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றது.
இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டும், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஏராளமான போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி (எ) சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்து இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை விவசாய தோட்டத்திற்கு வந்த சுப்பிரமணி 5 ஏக்கரில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இது குறித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் கமிஷனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகன்யா, பரமத்திவேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
- நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.






