பள்ளிபாளையத்தில் விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தம்

ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது. ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிபாளையத்தில் விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தம்
Published on

பள்ளிபாளையம்:

திருப்பூர், பல்லடம், சோமனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கலர்நூல்களை பயன்படுத்தி தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைதறிகளில் அனைத்து ரக ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் கழிவு பஞ்சு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திருப்பூர், பல்லடம், சோமனுர் ஆகிய பகுதியில் செயல்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்களில் நேற்று முதல் 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com