search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் நகராட்சி பகுதியில் 5 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
    X

    நாமக்கல் நகராட்சியில் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

    நாமக்கல் நகராட்சி பகுதியில் 5 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
    • பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் 55,000 குடியிருப்புகள் உள்ளது. இங்கு 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை களை சேந்த மங்கலம் சாலை முதலைப்பட்டி, கொச வம்பட்டி ரோஜாநகர் ஆகிய பகுதி களில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நுண்ணுயிர் செயலாக்கம் மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகின்றன.

    மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படு கின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப் பட்டு தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகின்றன.

    5 டன் குப்பைகள் தேக்கம்

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நாமக்கல் நகராட்சியில் பொதுமக்கள் கோலாகலமாக கொண்டா டினர். இதில் பட்டாசு வெடித்ததில் குப்பைகள் குவிந்தது.

    இதையடுத்து பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டது.

    இது குறித்து நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் நாள்தோறும் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 5 டன் பட்டாசு கழிவுகள் தேங்கியது. இவைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலைகளில் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×