என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் அவசரகால விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம்
    X

    குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் அவசரகால விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம்

    • தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி? கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி? கியாஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்தும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர். அனைவருக்கும் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×