search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.30.38 லட்சத்துக்கு விற்பனை
    X

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.30.38 லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97½ குவிண்டால் எடை கொண்ட 16 ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    அதேபோல் 363.49½ குவிண்டால் எடை கொண்ட 765 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 95ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    Next Story
    ×