என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள்
- விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
- தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் 2.50 ஏக்கர் வேம்பு கன்று நடவு செய்ய ரூ.17,500 அரசு மானியம் வழங்கப்படுகிறது. நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story






