என் மலர்
நாமக்கல்
- கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
- இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் நகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45 ). இவர் கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயினால் எரிந்து நாசமாயின .இந்நிலையில் கூரை வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பீரோ, உணவுப் பொருட்கள் ,துணிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.
- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.
- முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.
இந்த வங்கிகளில் கடந்த சில மாதங்களாக, உணவு இடைவேளைக்கு பிறகு பணம் வரவு, செலவு செய்வது கிடையாது. முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் காலை நேரத்தில் வங்கிக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதாகவும், அதேபோல் மாலை 5 மணி வரை வங்கி செயல்பட வேண்டிய நிலையில், மாலை 4 மணிக்கு முன்னதாகவே வரவு, செலவுகளை ஊழியர்கள் நிறுத்திக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. காலை நேரத்தில் சென்றால் நெட்வொர்க் கிடைக்கவில்லை, கம்ப்யூட்டர் பழுது என சாக்குபோக்கு சொல்கின்றனர். மாலை நேரத்தில் 4 மணிக்கு முன்னதாகவே கணக்கை முடித்து விடுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சரிவர பணியாற்ற வில்லை. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
- கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநி யோகம் செய்யும் பணியில் ஈடுபட்ட்டிருந்தபோது, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக, தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்து கொண்டு, ரேசன் கடை பணியாளர் கோபாலின் மனைவி கங்கா தேவியிடம், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், டி.என்.சி.எஸ்.சி மண்டல மேலாளர் செல்வ விஜய ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகளுக்கு தீ வைப்பது, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பது, வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சாய்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நித்யா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின் பேரில், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழுவினர் கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினர், தீ வைக்கப்பட்ட வெல்ல ஆலைகள், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடுகள், வாழை மரங்கள் வெட்டப்பட்ட தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து உண்மை கண்டறிய தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம். பல கட்டங்களாக ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் ஆய்வை சமர்ப்பிப்போம்.
பாதிக்கப்பட்ட நித்யா குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். கலவரத்தில் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வு குழுவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டச் செயலாளர் வக்கீல் துரைசாமி, கபிலர்மலை வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன், வட்டாரப் பொதுச் செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் காளியப்பன், பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி, பாண்டமங்கலம் நகரத் தலைவர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்லி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.
மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
- திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது.
திருச்செங்கோடு:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக ராம சந்திர நாயுடு இருந்தார்.
இந்த நிலையில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது. இதையடுத்து டிரைவர் சரவணன், ராமசந்திர நாயுடு ஆகியோர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.
அதற்குள் லாரி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனிடையே டயர் வெடித்து தீப்பிடித்தபோது, லாரியின் பின்னால் வந்த இரு சக்கர வாகனத்திலும் தீப்பிடித்தது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த நரசிம்மன் மற்றும் சரஸ்வதி ஆகியோர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் பிடித்த தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென லாரி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
- தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் (யு.பி.எஸ்.சி) தேர்வு எழுதினார்.
தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 117-வது இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து ராமகிருஷ்ண சாமி கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் எனது சொந்த ஊர். தந்தை ரங்கராஜ். தாய் தனலட்சுமி. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., மெக்கானிக்கல் படித்து முடித்தேன். தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
எனினும், படிக்கும் காலத்தில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. எனவே யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வந்தேன்.
யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்யும் சமயத்தில், கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.
அதன் அடிப்படையில், தற்போது நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். அரசுப் பணி கிடைத்தாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எனவே தொடர்ந்து அதற்காக பயிற்சி எடுத்து வந்தேன்.
ஏற்கனவே 2 முறை நேர்முகத்தேர்வு வரை சென்று தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அந்த அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு மிகவும் கவனமாக படித்து தேர்வு எழுதினேன். தற்போது 3-வது முயற்சியில், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று, அகில இந்திய அளவில் 117 இடத்தைப் பிடித்துள்ளேன். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது.
- இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் களங்காணி ரெயில் நிலையத்தில் இருந்து, நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது. இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும் தென்னக ரெயில்வே துறைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற வேண்டி உள்ளது. இதுநாள் வரை இதற்கான ஒப்புதலை தென்னக ரெயில்வே வழங்கவில்லை.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய ரெயில்வே அமைச்ச கத்துக்கு, மரூர்ப்பட்டி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி ஒரு கடிதம் அனுப்பினார். அவரது கோரிக்கையை ஏற்று நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு திட்டத்தில், மரூர்ப்பட்டி அருகே ரெயில் பாதையில் மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சா லைத்துறைக்கும், தென்னக ரயில்வேவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மேம்பாலம் அமைக்க தேவையான திட்ட மதிப்பீட்டை, தென்னக ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையிடம் அளிக்கும். அதன்பி றகு மேம்பாலம் கட்டுமான பணியை தென்னக ரயில்வே மேற்கொள்ளும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் உமா மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 230 மனுக்களை கலெக்டர் உமாவிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்று கொண்ட கலெக்டர் உமா மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் வட்டம், வடகரை யாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரப்பாளையம் பகுதியை சேர்ந்த நித்யா 11.03.2023 அன்று மர்மமான முறையில் இறந்ததையடுத்து, சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அவரது குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ.4 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை யினை அவரது மகள் தனுஷ் ஶ்ரீ க்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்கு வதற்கான ஆணையினை கலெக்டர் உமா வழங்கினார்.
மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.3,800 மதிப்பில் 10 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு கோல்களும், ரூ.1,500 மதிப்பில் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்புக் கண்ணாடிகளும், ரூ.7,340 மதிப்பில் 4 மாற்றுத்திற னாளிகளுக்கு பிரெய்லி வாட்ச்களும், ரூ.9,050 மதிப்பில் 1 மாற்றுத்திறனா ளிக்கு மூன்று சக்கர வண்டி யும், ரூ.600 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோல் என 26 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.22,290 மதிப்பில் நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுலவர் மணி மேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நடந்தை அருகே உள்ள பெரிய சூரம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (88). இவர் பெரியசூரம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.
- முன் தினம் இரவு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் தர்மகர்த்தா கந்தனை பின்னால் அமரவைத்துக்கொண்டு பெரியசூரம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44) விவசாயி. நடந்தை அருகே உள்ள பெரிய சூரம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (88). இவர் பெரியசூரம்பாளை யத்தில் உள்ள பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.
நேற்று காலை பெரிய சூரம்பாளையம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கந்தன், மும்முரமாக செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் தர்மகர்த்தா கந்தனை பின்னால் அமரவைத்துக்கொண்டு பெரியசூரம்பாளையம் நோக்கி சென்று கொண்டி ருந்தார். செஞ்சுடையாம்பா ளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சக்திவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சக்திவேலும், கந்த னும் கீழே விழுந்து படு காயம் அடைந்து உயி ருக்கு போராடியுள்ளனர். இதை பார்த்த அவ்வழியாக வந்த வர்கள் அவர்கள் இரு வரையும் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த கந்தனை டாக்டர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கந்தன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கோவில் தர்மகர்த்தாவான கந்தன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து நேற்று காலை நடைபெற இருந்த பெரு மாள் கோவில் கும்பாபி ஷேகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
- இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாலை நேரத்தில் அப்பகுதியில் சீம கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணி புரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் வன்முறை
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், ஏரி தண்ணீ ரில் விஷம் கலந்து மீன்கள் செத்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி நள்ளிரவு வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து வட மாநில தொழி லாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கென்ட் (19) என்பவர் உயிரிழந்தார்.
கடந்த 18- ந் தேதி இரவு ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் உள்ள முருகேசன் என்ப வரது வாழைத்தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்தனர்.
இதையடுத்து இப்பகுதி களில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியி லும் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது
இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது. இதையடுத்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா, விசாரணை அதி காரியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபாவிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கரப்பாளை யத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்ற சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் போலீசார், அவரது கணவர், அவரது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.
கொலை நடந்த இடத்தை யும், அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும் தீவிர விசாரணை நடத்த உள்ள னர். சி.பி.சி.ஐ.டி போலீ சாரின் முழு விசா ரணை நடந்த பிறகே கொலை சம்பந்தமான உண்மை தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
- இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இறகு பந்து போட்டி தொடக்க விழாவிற்கு சோழசிராமணி ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் சந்திரசேகரன் முன்னிலை வைத்தார். தனியார் பள்ளி தாளாளர் தேவராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில், கவுந்தப்பாடி அணி முதலிடத்தையும், திருச்செங்கோடு அணி 2-ம் இடத்தையும், ஜேடர்பாளையம் 3-ம் இடத்தையும், சோழசிராமணி அணி 4-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப்பைச் சேர்ந்த பரத் நன்றி கூறினார்.






