என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடைவீதியில் வெள்ளம் தேங்கியதால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து டெல்டா விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்த காவிரி கால்வாய்களில் பிரிந்து விடப்பட்டு வருகிறது.

    கடை மடை பகுதிக்கு காவிரி நீர் சென்ற நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசர், வைத்தீஸ்வன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10.30 மணிவரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டனர். சீர்காழி காமராஜ் வீதியில் மழை வெள்ளம் தேங்கியதால் இன்று காலை அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர். அங்கு சேதங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொள்ளிடம் அருகே சாலையில் சரிந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளதால் அதை சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மாங்கணாம்பட்டு கிராமத்தில் சாலையோரம் மின் மாற்றி அமைந்துள்ளது. இதன்மூலம் மாங்கணாம் பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மின் மாற்றியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காற்றினால் முறிந்து விழும் நிலை உள்ளது.

    மேலும் இம் மின்மாற்றிக்கென அமைக்கப்பட்டுள்ள பியூஸ் கேரியர் பொருத்தப்படுள்ள இரும்பு பெட்டி ஆபத்தான வகையில் பெயர்ந்து தரையில் கிடக்கிறது. எனவே பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் பொருத்தவும், மின்னோட்டம் உள்ள இரும்பு பெட்டியை சரி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). மீனவர். இவர் இன்று காலை 5 மணி அளவில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார்.

    அப்போது ஆடிகாற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான சக்தி வேலுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், தேவிகா என்ற மகளும், அருணகிரி என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவ கோடிக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு மீனவாரிய ஊழியர்கள் சென்று மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மது போதைக்காக காப்பர் கம்பி திருட முயன்ற கொள்ளையன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது. #Electricalshock

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மது வாங்குவதற்காக டிரான்ஸ்பார்மரில் ஏறி காப்பர் கம்பியை திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார்.

    மயிலாடுதுறை எடத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் மது அடிமையாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதுகுடிக்க பணம் தேவைபட்டதால் ரமேஷ் மயிலாடுதுறை ஐயாறப்பர் தெற்கு வீதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது ஏறி காப்பர் கம்பியை திருட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது டிரான்ஸ்பார்மருக்கு அருகில் ரமேஷ் வெட்டிய காப்பர் கம்பிகள் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #Electricalshock

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் போலீசார் 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிபடையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் கடந்த 25-ந் தேதி சரண் அடைந்தனர். இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலையில் தொடர்ந்து துப்பு துலங்கி வரும் தனிப்படை போலீசார் இந்த சம்பவம் குறித்து திருவையாறு குணா என்ற குணசேகரன், எமர்சன் பிரசன்ன, சிலம்பரசன், தமிழரசன், சீர்காழி குலோத்துங்கன் ஆகிய 5 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த கொலை குறித்து இன்னும் அதிக தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கொலையாளிகளிடம் இருந்து போலீசாருக்கு தேவையான வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்ய வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    நாகையில் சரியாக தூர்வாரப்படாத வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளியை சூழ்ந்ததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே சித்தமல்லியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் 70 பேரும், மாணவிகள் 40 பேரும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ராஜன் வாய்க்கால் மூலம் சித்தமல்லியில் உள்ள படுகை வாய்க்காலுக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் நேற்று மாலை சித்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சூழ்ந்தது.

    முழங்கால் அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பள்ளியை சுற்றிலும் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் நின்றதால் பள்ளி ‘தீவு ’போல் காணப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இன்று 2-வது நாளாகவும் பள்ளி முன்பு தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே வளாகத்தில் தேங்கிய தண்ணீரை இன்று 2-வது நாளாக பணியாளர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி முன்பு தேங்கிய தண்ணீர் அகற்றி விட்டு, வாய்க்காலை தூர்வார முழுமையாக தூர்வார பொதுப்பணி துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜி.எஸ்.டி. வரியால் பிரம்பு தொழில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். #GST

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பிரம்பு மூலம் கைவினை பொருட்கள் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர். பிரம்பு மூலம் இங்கு ஊஞ்சல், சோபாசெட், குழந்தைகளுக்கான ஊஞ்சல் மற்றும் நாற்காலிகள், டைனிங் டேபிள், கட்டில், அலமாரி, பீரோ, அரிசி கூடை, அர்ச்சனை கூடை, பழ கூடை, அலங்காரகூடை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்கள் அணிந்து கொள்ளும் தொப்பி ஆகியவைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கான பிரம்புகளை அஸ்ஸாம், அந்தமான், மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் வாங்குகின்றனர் . தைக்கால் கிராமத்தில்மட்டும் 60 பிரம்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரம்பு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    மூங்கில்பிரம்பு, அந்தமான்பிரம்பு, ரைடான், ஜாதி என்ற 4 வகை பிரம்புகளை பயன்படுத்தி கைவினை பொருட்களை செய்கின்றனர். ரைடான் வகை பிரம்பு மிகவும் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

    இங்கு செய்யப்படுகின்ற பிரம்பு பொருட்கள் கோவை, சென்னை வேலூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தைக்காலில் உள்ள அனைத்து கடைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பிரம்பு தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இத்தொழிலை வைத்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடிசைத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பிரம்பு தொழில் ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் சேர்க்கப்பட்டு ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுவதால் பிரம்புகளின் விலை அதிகமாகி விட்டது. இதனால் இத்தொழில் மூலம் போதிய லாபம் கிடைக்கவில்லை என்கின்றனர்.

    இதுபற்றி ஜாமாலுதீன் என்பவர் கூறுகையில், தைக்காலில் பிரம்புதொழிலில் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒருமாதத்திற்கு 15 நாள் முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இத்தொழிலை வைத்து தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. இத்தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. குடிசைத் தொழிலாக இருந்த இத்தொழிலை அரசு ஆடம்பரபொருட்கள் தயாரிக்கும் தொழிலாக அறிவித்து ஜி.ஸ்.டி. வரியும் விதித்துள்ளதால் பிரம்புகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    இதனால் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்து தற்போது போதிய லாபம் கிடைக்கவில்லை என்றார். மற்றொரு தொழிலாளர் குறள்தாசன் கூறுகையில், இது வரை பிரம்பு தொழிலுக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை வங்கி கடன் கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் வங்கி கடன் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே அரசு பிரம்பு தொழிலுக்கு இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும். மேலும் ஆடம்பரத்தொழிலை மாற்றி குடிசைத் தொழிலாக மாற்றவும், வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. #PrimaryHealthCenter

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 3 வருடங்களாக துணை சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வாரத்தில் 3 நாட்கள் மருத்துவர் வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் இதுவரை மருத்துவர்கள் யாரும் பணி அமர்த்தப்படவில்லை.

    இந்நிலையில் இங்கு பணியாற்றிய செவிலியரும் தற்போது வருவதில்லை. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கடலங்குடி, திருவேள்விக்குடி, வாணாதிராஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

    கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதற்கும், பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும், மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் குத்தாலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி இங்கு மருத்துவர்களை நியமித்து கடலங்குடி துணை சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicidecase

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி சாலையில் எலெக்டிரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 45). இவர் உறவினர் மகன்கள் பாவர்லால் (22), அவரது தம்பிகள் பரத், திலிப் மற்றும் உறவினர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை பாவர்லால் அறை கதவு திறக்கப் படாததால் கதவை திறந்து பார்த்தபோது அந்த அறையில் தூக்குபோட்டு பாவர்லால் இறந்து கிடந்தார். இது குறித்து ராஜேஷ்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிப்படையை சேர்ந்த சீர்காழியை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் மற்றும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி 3 பேரையும் சீர்காழிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சீர்காழிக்கு வந்து விசாரணை நடத்தினார். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட பிடாரி வடக்கு தெருவுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோர் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீர்காழி சேகர், மயிலாடுதுறை வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் சீர்காழி சிங்காரவேலு, பொறையாறு செல்வம், கொள்ளிடம் முனிசேகர் ஆகியோர் கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் இல்லத்துக்கு ஜெயராமன், மார்க்கோனி ஆகியோரை ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தெரிய வந்துள்ளது.

    ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ஆனார். இந்த செல்வாக்கை பயன்படுத்தி மணல் குவாரி, மற்றும் பல்வேறு ஒப்பந்த பணிகளை காண்டிராக்ட் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இதனால் அவர் மீது பலருக்கு பொறாமையும், போட்டியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி வடகரை இடையாளூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பசிரூதீன் (வயது 38), பெயிண்டர்.

    இவர் இன்று காலை சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் அருகே சென்ற போது 2 மாணவர்கள் லிப்ட் கேட்டனர்.

    மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விக்னேஷ் (15), விஜயகுமார் (15) ஆகியோர் பசிரூதீனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அருகே சேந்தகுடி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் மோதியது. இதில் பசிரூதீன் சம்பவ இடக்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற விக்னேஷ், விஜயகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான பசிரூதீன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணையினை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தில் 9 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 183 என மொத்தம் 192 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 வீதம், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒரு நபருக்கு தலா ரூ.1000 வீதம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினையும் வழங்கினார்.

    சமூக நலத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிப் பெற்ற கல்லுரி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×