என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kodiyakarai fishermen death
நீங்கள் தேடியது "Kodiyakarai fishermen death"
கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). மீனவர். இவர் இன்று காலை 5 மணி அளவில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார்.
அப்போது ஆடிகாற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான சக்தி வேலுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், தேவிகா என்ற மகளும், அருணகிரி என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவ கோடிக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு மீனவாரிய ஊழியர்கள் சென்று மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X