என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    4 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், கள்ளக்காதலன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த மேலவாஞ்சூா் பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் அரவிந்த். இவரது மனைவி அபா்ணா(வயது 24). இவர்களது மகன் கவித்திரன்(4). காா்த்திக் அரவிந்த், சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த அபா்ணா, நாகை தாமரைக்குளம் மேல்கரையை சோ்ந்த ஆட்டோ டிரைவரான சுரேஷ்(34) என்பவருடன் நாகை காடம்பாடி சூரியா நகரில் குடும்பம் நடத்தி வந்தாா்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி சிறுவன் கவித்திரன் மா்மமான முறையில் இறந்து கிடந்தான்.

    இதுகுறித்து தகவலறிந்த காா்த்திக் அரவிந்த் தனது மகன் கவித்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இதுதொடர்பாக அபர்ணா, சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அபர்ணா, சுரேஷ் இருவரும் தனிமையில் இருந்த போது கவித்திரன் இடையூறு செய்ததால் அவனை அபா்ணா துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், சிறுவன் தானாகவே இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அபர்ணா, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் நாகை சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில் சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற அபர்ணா, சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அபர்ணா, சுரேஷ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
    வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26), மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (20). இருவரும் நண்பர்கள். மருதூர் வடக்கு கிராமத்தில் ஆனந்த் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். துரைமுருகன் அவருடன் பணியாற்றி வருகிறார். ஆனந்துக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.

    இந்தநிலையில் கத்திரிப்புலத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண் 11வது படித்துவிட்டு கொரானாவால் பள்ளிக்கு செல்ல முடியாததால் அந்த பகுதியில் நடைபெறும் சாலை பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம்தேதி இளம்பெண்ணை ஆனந்தும், துரைமுருகனும் சேர்ந்து கடத்தி சென்று ஆனந்த் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

    இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தையும், துரை முருகனையும் போஸ்கோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே காதல் பிரச்சனையில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கோவில் குத்தகையை சேர்ந்தவர் கணேசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கத்திரிபுலத்தில் 16 வயதுடைய மாணவன் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இருவரும் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு பஸ்ஸில் சென்றபோது வி‌ஷம் குடித்துள்ளனர். சென்னை உறவினர் வீட்டுக்குச் சென்றபோது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் சிகிச்சை பலனில்லாமல் மாணவி இறந்தார். காதலன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று அதிகாலை நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு பைபர் படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பைபர் படகில் சோதனை செய்தனர். அப்போது அந்த பைபர் படகில் மீன்பிடி வலைகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது..

    கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுபோல பைபர் படகில் கஞ்சாவை பதுக்கி வைத்து அதனை இலங்கைக்கு கடத்த தயாராக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த 280 கிலோ கஞ்சா, மீன்பிடி வலைகள், கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 4 மோட்டார் சைக்கிள்கள், பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நாகை சுங்கத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எங்கிருந்து கஞ்சா கடத்தி நாகைக்கு கொண்டு வரப்படுகிறது?, இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தக்கோரி பொறையாறில் சிலிண்டர், மொபட்டுக்கு மாலை அணிவித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.
    பொறையாறு:

    பொறையாறு பழைய பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தக்கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு சம்மேளன செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் கியாஸ் சிலிண்டர் மற்றும் மொபட்டுக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தினை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மாலா, மெஸ்சி, அன்பு செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் அருகே துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தில் ஒரு வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் புஷ்பவனத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் வேங்கடவரதன் (வயது25) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் பட்டாசு வெடிக்க தனியாக ஆள் வைத்திருக்கிறோம். நீங்கள் ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வேங்கடவரதன், அவர்களை தாக்க முயன்றார். அதை பார்த்த அதே ஊரை சேர்ந்த விவசாயியான காளிமுத்து (47) என்பவர் தடுக்க முயன்றார். இதனால் வேங்கடவரதன் தான் வைத்திருந்த கத்தியால் காளிமுத்துவை குத்தினார்.

    இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேங்கடவரதன் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்து செய்தனர்.
    நாகூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், நாகூர் சாமந்தான்பேட்டையை சேர்ந்த தில்லையம்பலம் மகன் கந்தவேல் (வயது 30), திருச்சி கிழபடையார்ச்சி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சூசைராஜ் (36) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூசைராஜ், கந்தவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் மருந்து கொத்தலரோடு அரசன் காலனி பகுதியை சேர்ந்த விஜயபாரதி (வயது23) என்பவர் மீது பல்வேறு கொலை, வழக்குகள் உள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பரிந்துரையின்படி, கலெக்டர் அருண் தம்புராஜ் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    வேதாரண்யம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமம் எனை ஆளும் கண்ண பெருமான் கோவில் அருகே தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க குழிதோண்டி டவர் அமைக்க வேண்டிய பொருட்களை கொண்டு வந்து பணி தொடங்கினர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேட்டைகாரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முடிவு தெரியும்வரை டவர் அமைக்க மாட்டார்கள் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.
    திருமருகலில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் சுபைதா (வயது 22). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள கொட்டகையில் சுபைதா தூக்குப்போட்டு கொண்டனார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபைதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அங்கு வந்து சுபைதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளுர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே தேவூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரட்டைமதகடி ரோட்டில் சந்தேகத்துக்குரியை வகையில் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மனோகர் மனைவி முத்துலட்சுமி (வயது38) என்றும் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதைப்போல கோவில் கடம்பனூர் சன்னதி தெருவில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் அருகே டீக்கடையில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் அவரிக்காடு மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரிக்காடு மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ராஜா (வயது 46) என்பவர் தன் கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் டீக்கடையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனர்.

    ×