search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளுர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

    கீழ்வேளுர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே தேவூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரட்டைமதகடி ரோட்டில் சந்தேகத்துக்குரியை வகையில் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மனோகர் மனைவி முத்துலட்சுமி (வயது38) என்றும் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதைப்போல கோவில் கடம்பனூர் சன்னதி தெருவில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×