search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே டீக்கடையில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது

    வேதாரண்யம் அருகே டீக்கடையில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் அவரிக்காடு மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரிக்காடு மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ராஜா (வயது 46) என்பவர் தன் கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் டீக்கடையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனர்.

    Next Story
    ×