என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக இன்று காலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை&காரைக்கால் கம்பன் விரைவு ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய இளைஞர் கை, கால் தலை சிதறிய நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.
சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த ராஜு தலைமையிலான ரெயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக இன்று காலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை&காரைக்கால் கம்பன் விரைவு ரெயிலில் அடிபட்டு 25 வயதுடைய இளைஞர் கை, கால் தலை சிதறிய நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.
சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த ராஜு தலைமையிலான ரெயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரவப்புலம் பள்ளியில் 1&ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிலம்ப போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் சீதாலெட்சுமி தொடக்க பள்ளியின் 1&ம் வகுப்பு மாணவன் ரியாத். இவர் திருவாரூரில் நடந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் சிலம்பம் சுழற்றும் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் செயலர் கிரிதரன் மாணவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் பபிதா பானு, உதவி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி உட்பட பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், கல்விக்குழுவாளர்கள் மற்றும் மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி வாலிபர் பலியானார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாணிக்கேட்டகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(32). இவர் சிறுவயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.
இவரது தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது சித்தி அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக கூரை வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென சங்கர் இருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது. அப்போது வீட்டின் உள்ளே இருந்த சங்கர் தீயில் கருகி பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த வாய்மேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
உலக மகளிர்தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்
வேல்டு விஷன் இந்தியா சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும்
பெண்களுக்கு ஏற்ற சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு
ஏற்படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து வாழ்வாதார வளர்ச்சியில் மேம்பட்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழை
மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வேர்ல்டு விஷன் இந்தியாவின் துணை இயக்குனர் சாம்சங் பந்து மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் அருகே 100 ஆண்டுகளுக்குப் பிறகு மேலமறைக்காடார் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்
கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மேலமறைக்காடார்
கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர
பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன்
யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்றது.
இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று.
புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து
சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க,
கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம்
நடைபெற்றது. பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் திரளான
பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
வேதாரண்யம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் நான்காம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் உத்திராபதி (வயது25). பெயிண்டர். இவர் பஞ்சநதிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து
திருமணம் செய்து கொண்டாராம்.
இந்நிலையில உத்திராபதியின் பெற்றோர் இந்த திருமணத்தை
ஆதரித்து இருவரையும் வீட்டுடன் வைத்து கொண்டார்களாம்.
இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
அவரது உடல் நலம் சரியில்லாததால் திருவாரூர் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து அங்கு
சிகிச்சை பெற்று வருகிறார்.
இளம்வயது பெண் கர்ப்பம் ஆனது குறித்து சிறுமியை பரிசோதித்த
டாக்டர் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்குப்பதிவு செய்து
பெயிண்டர் உத்திராபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாகை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 8 பேரை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் பெருங்கடம்பனூரில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். சங்கமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ராஜன் மகள் தீபா (27).
இவர் மெடிக்கலுக்கு வந்து ராமசந்திரனிடம், தான் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ராமச்சந்திரன் தனது அண்ணன் சக்திவேல் மகன் சபரிராஜ் என்பவருக்கு வேலை வேண்டி ரூ.3.50 லட்சம் தீபாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நீண்ட நாட்களாக தீபாவிடம் இருந்து அரசு வேலை தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இதற்கிடையே ஏமாந்த மற்றொருவரான காயத்திரி என்பவரும் தீபாவை தேடி வந்தார். இந்நிலையில் தீபாவின் தாயார் மற்றும் சகோதரர் வீட்டை காலி செய்து பொருட்களை வாகனத்தில் ஏற்றுவது தெரிய வந்தது. தகவல் அறிந்த ராமச்சந்திரன் கிராம மக்கள் உதவியோடு பிடித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் வடலூரில் தீபா பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீபாவை நாகைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராமச்சந்திரன் தவிர மேலும் 7 பேரிடம் ரூ.15 லட்சம் வரை வேலை மோசடியில் ஈடுபட்டதும், பிறரை நம்ப வைப்பதற்காக போலி அடையாள அட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் பகுதியில் பனியால் மாம்பூக்கள் கருக தொடங்கியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் இப்பகுதியில் சுமார் 5000 டன் மாங்காய் காய்த்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மாங்காய் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடும்பனி பொழிவால் மாபூக்கள் கருக தொடங்கியுள்ளது.
மேலும் தேன்பூச்சி தாக்குதாலும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. எனவே விவசாய துறையினர் மாபூக்கலில் ஏற்படும் கருகால் நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
வேதாரண்யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 312 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் நிலுவையில் இருந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை, நீதிபதி லிசி தலைமையில் லோக் அதாலத் மன்ற உறுப்பினர்களான வக்கீல்கள் குமரவேல், வைரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
முடிவில் கிரிமினல், சிவில் வழக்குகள் என 312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 300 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி வேளாங்கண்ணி பேராலய திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்றதும், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது,
தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டும், சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
கோடியக்கரை காட்டுப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு மற்றும் கோடியக்கரை ஊராட்சி பகுதிகளில் சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்றும் பசுமைமாறா காடுகள் என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான காட்டுப்பகுதி உள்ளது.
இந்தக் காட்டுப் பகுதியில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அருகருகே அமைந்துள்ளது. சரணாலயப் பகுதியில் வெளிமான், புள்ளிமான், முயல், நரி, குரங்கு, மயில், பாம்பு வகைகள், காட்டு பன்றி, குதிரை உள்ளிட்ட சாதுவான மிருகங்களும், பறவைகள் சரணாலயத்தில் சீசன் காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பறவைகளும் காணப்படும்.
மேலும் காட்டுப்பகுதி ஆரம்பமாகும் ராமர் பாதம் முதல் துவங்கும் காட்டுப்பகுதியில் மூலிகை வனப்பகுதியும் உள்ளது.
இந்த மூலிகை வனத்தில் வயிற்று வலி, சளி, ஜூரம் மூக்கடைப்பு முதல் புற்றுநோய் உள்ளிட்ட பெரும் நோய்களுக்கு தேவையான அனைத்து வகையான மூலிகை மருந்துகள் செடி, கொடி, மரங்களாகவும் வளர்ந்துள்ளது.
இதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக உதவும் ஆவாரம்பூவும் பெருமளவில் உள்ளது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு அரு மருந்தாக உதவும் ஆவாரம் பூ காட்டுப் பகுதி முழுவதும் மட்டுமின்றி சாலைகளின் இருபுறமும் செல்வோர் கண்களை கவரும் வகையில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் போர்வை போர்த்தியது போல ஆவரம் பூ பூத்து குலுங்குகிறது.
இந்த மரத்தின் இலை, பட்டை, பூக்கள், காய் உள்ளிட்டவைகள் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக உதவுமென சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோடியக்கரை பொறிப்பகத்தில் பொறித்த313 ஆலிவர் ரெட்லி ஆமைகள் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாகஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லுவது வழக்கம்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள். அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வருவது வழக்கம்.
1982 ஆம் ஆண்டு முதல் கோடியக்கரை வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் ஆமை மூட்டைகள் சேகரிக்கபட்டு ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கபட்டு உள்ளது. இதில் 3 ஆமைகளில் இருந்து எடுக்கபட்ட 313 ஆமை குஞ்சுகள் வெளிவந்தன.
இதை வனத்துறையினர் கோடியக்கரை கடல் பகுதியில் விட்டனர். மேலும் உள்ள ஆமை மூட்டைகள் குஞ்சு பொறித்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் சரக காவல்துறை கண்காணிப்பாளர் முருகவேல், குஜராத் கெமிக்கல் நிறுவன மேலாளர் சுந்தர்ராஜ், கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் மற்றும் வனவர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர்.






