என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலிவர் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலுக்குள் செல்லும் காட்சி.
313 ஆலிவர் ரெட்லி ஆமைகள் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோடியக்கரை பொறிப்பகத்தில் பொறித்த313 ஆலிவர் ரெட்லி ஆமைகள் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாகஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லுவது வழக்கம்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள். அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வருவது வழக்கம்.
1982 ஆம் ஆண்டு முதல் கோடியக்கரை வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் ஆமை மூட்டைகள் சேகரிக்கபட்டு ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கபட்டு உள்ளது. இதில் 3 ஆமைகளில் இருந்து எடுக்கபட்ட 313 ஆமை குஞ்சுகள் வெளிவந்தன.
இதை வனத்துறையினர் கோடியக்கரை கடல் பகுதியில் விட்டனர். மேலும் உள்ள ஆமை மூட்டைகள் குஞ்சு பொறித்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் சரக காவல்துறை கண்காணிப்பாளர் முருகவேல், குஜராத் கெமிக்கல் நிறுவன மேலாளர் சுந்தர்ராஜ், கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் மற்றும் வனவர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






