என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீக்கிரையான வீடு மற்றும் தீயில் கருகி பலியான சங்கர்.
வீடு தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் பலி
வேதாரண்யம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி வாலிபர் பலியானார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாணிக்கேட்டகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(32). இவர் சிறுவயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.
இவரது தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது சித்தி அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக கூரை வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென சங்கர் இருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது. அப்போது வீட்டின் உள்ளே இருந்த சங்கர் தீயில் கருகி பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த வாய்மேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






