என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன் பூச்சி மற்றும் பனியால் கருகிய மாம்பூக்கள்.
    X
    தேன் பூச்சி மற்றும் பனியால் கருகிய மாம்பூக்கள்.

    பனியால் கருகும் மாம்பூக்கள்

    வேதாரண்யம் பகுதியில் பனியால் மாம்பூக்கள் கருக தொடங்கியுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் இப்பகுதியில் சுமார் 5000 டன் மாங்காய் காய்த்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மாங்காய் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடும்பனி பொழிவால் மாபூக்கள் கருக தொடங்கியுள்ளது. 

    மேலும் தேன்பூச்சி தாக்குதாலும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. எனவே விவசாய துறையினர் மாபூக்கலில் ஏற்படும் கருகால் நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
    Next Story
    ×