என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவனை பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
    X
    மாணவனை பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

    பள்ளி மாணவன் சிலம்ப போட்டியில் சாதனை

    குரவப்புலம் பள்ளியில் 1&ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிலம்ப போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் சீதாலெட்சுமி தொடக்க பள்ளியின் 1&ம் வகுப்பு மாணவன் ரியாத். இவர் திருவாரூரில் நடந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் சிலம்பம் சுழற்றும் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்து வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் செயலர் கிரிதரன் மாணவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் பபிதா பானு, உதவி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி உட்பட பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், கல்விக்குழுவாளர்கள் மற்றும் மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×