என் மலர்
நாகப்பட்டினம்
திருமருகல் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி காப்பு கட்டியதுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி காப்பு கட்டியதுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
திருமருகல் அருகே குடிசை மீது உரசி செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கிராமம் உள்ளது.இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிடாமங்கலம் பகுதியில் இருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கிடாமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக குடிசை வீடுகளை உரசி செல்கிறது.
இதனால் வேகமாக காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து குடிசை வீடுகளில் விழுகிறது. இதனால் அடிக்கடி குடிசைகள் தீப்பற்றி எரிகிறது. எந்த நேரத்திலும் பெரும் அளவில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலன் கருதி உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம் பெரியத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தமிழ்செல்வம் (25) மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த 15&ந் தேதி அதே பகுதியை சேர்ந்த வீரையன் மகன் சதீஷ்குமார் (25) என்பவர் தமிழ்செல்வத்தை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக செந்தில்குமார் வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு இன்று தனியாக கரை ஒதுங்கி நின்றது.
தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படகை மீட்டு சோதனை நடத்தினர். ஆனால் அதில் மீன் பிடிக்க தேவைப்படும் வலைகள், மீன் பிடி சாதனங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கையில் இருந்து யாராவது அத்துமீறி நுழைந்து படகை விட்டு சென்றார்களா? அல்லது இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை எல்லைக்கு உட்பட்ட ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மேக்சிகேப் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி ஆகியோர் அடங்கிய குழு திடீர் சோதனைகள் மற்றும் தணிக்கை செய்தனர்.
அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் தகுதிச் சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கப்படும்.
வாகனங்கள் அனுமதிக்க புறம்பாக அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ என மொத்தம் 14 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. 14 வாகனங்களுக்கும் அபராதத் தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி மனநல ஆலோசனை காவல் உதவி சட்ட உதவி தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கிய அவர்களைப் பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு பணிபுரிய நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாகை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுய விவரங்களுடன் தெரிவிக்கப்படுகிறது.
பதவி வழக்கு பணியாளர் 2 பேர் இடம் 4 வயது வரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும். உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம், சிறப்பு ஊதியம் ரூ.3000. பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1- கல்வித்தகுதி 8-வது, 10-வது தேர்ச்சி, தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த பெண் பணியாக இருக்க வேண்டும். உள்ளூரை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
தொகுப்பு ஊதியம் ரூ.6400. பாதுகாவலர் பணியிடம் ஒன்று கல்வித் தகுதி 8&ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி தோல்வி. வயதுவரம்பு 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்தவராக வேண்டும். தொகுப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம். விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலிவ்ரிட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில்
132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்.
அதில் கடந்த வாரம் மூன்று ஆமைகள் இட்ட 313 முட்டைகளிடம் இருந்து வெளிவந்த ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
இன்று 2-வது முறையாக 375 ஆமை குஞ்சுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வன உயிரின காவலர் யோகேஷ் குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கடலில் விட்டனர்.
பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் உள்ள சொர்ணகாளியம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல்துறையின் சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மத்திய மண்டல
ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். மத்திய மண்டலத்தில் முதன்முறையாக நாகை மாவட்ட ஆயுதப்படையில் தான் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலும் கிராமப்புற குழந்தைகள் கல்வியறிவில் சிறந்த நிலையை அடைய இது போன்ற நூலகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவில் விழாவிற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய அவர்கள் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், 3Ñ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மின்விசிறியை போட்டு காற்று வாங்கிவிட்டு சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே கீழ்வேளூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமருகல் ஒன்றியத்தில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. குறைதீர்ப்பு முகாம் நடத்தி மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
நாகப்பட்டினம்:
அந்த வகையில், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டாரவடை, போலகம், திருப்புகளூர், ஏனங்குடி, புத்தகரம், கொங்குராயநல்லூர், அம்பல், ஏர்வாடி, இடையாத்தங்குடி, ஆதலையூர், வடகரை, கோட்டூர், திருக்கண்ணபுரம், உத்தமசோழபுரம், நரிமணம், மருங்கூர், நெய்குப்பை, கீழப்பூதனூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில், முகமதுஷா நவாஸ் எம்.எல்.ஏ,
குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி மக்களிடம் கோரிக்கை மனுக்களை
பெற்று வருகிறார்.
அந்த வகையில், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டாரவடை, போலகம், திருப்புகளூர், ஏனங்குடி, புத்தகரம், கொங்குராயநல்லூர், அம்பல், ஏர்வாடி, இடையாத்தங்குடி, ஆதலையூர், வடகரை, கோட்டூர், திருக்கண்ணபுரம், உத்தமசோழபுரம், நரிமணம், மருங்கூர், நெய்குப்பை, கீழப்பூதனூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.






