என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கோடியக்கரை கடற்கரையில் பலத்த சூறைக்காற்றில் மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் இன்று காலை திடீர் நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்று கடலில் இருந்து கிளம்பி தரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட மீன்பிடி  வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

    மேலும் கடற்கரையில்  இருந்த  கீற்று கொட்டகைகள் காற்றில் பறந்தன . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

    கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    திருமருகல் அருகே பகத்சிங் நினைவு நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். 

    கட்டுமாவடி கிளைச் செயலாளர் தமிழரசன், கட்சியின் மூத்த நிர்வாகி அப்பாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் கொடியேற்றி வைத்தார். 

    அதைத்தொடர்ந்து மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாள் நடைபெறும் மாநில மாநாட்டை முன்னிட்டு 23 மாநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டது. 

    இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    வேதாரண்யம் பகுதியில் மாடுகளை கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு செட்டிபுலம், கரியாபட்டினம் உள்ளிட்ட 25&க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி வயல்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் ரசாயன உரங்கள் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கின்றனர்.

    குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் கட்டி மண்ணை வளமாக்கி இயற்கையான சாகுபடிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வை எதிர்நோக்கும் விவசாயிகளின் இந்த முயற்சியை மக்கள் பாராட்டுகின்றனர்.
    நாகை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் கழக துணை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    இதற்காக மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3 ஆயிரம் மெட்ரிக் டன் இயக்கப்பட்டு வருகிறது. 

    இதில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு ரெயில்வே வேகன் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் நெல்கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் நடந்து வருகிறது.

    கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாவட்டத்திலுள்ள 5 திறந்தவெளி மையத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது. 

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக (நெல் கொள்முதல் மற்றும் இயக்கம்) துணை மேலாளர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
    வேதாரண்யம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் மேலகாடு கிராமத்தில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் பேரன் விமல்குமார் வசித்து வருகிறார் மோகன் தனது மனைவி ராஜலட்சுமி இடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு மனைவி பணம் தர மறுத்துள்ளார் இதனால் விரக்தி அடைந்த கணவர் மோகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து விட்டார் ஆபத்தான நிலையில் மோகனை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை அருகே பட்டமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் 47 நெல் மூட்டைகள் திருடப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8000 நெல் மூட்டைகள் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், 580 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன.

    நேற்றிரவு வழக்கம்போல் கொள்முதல் பணியை முடித்துவிட்டு, பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கொள்முதல் நிலையத்திற்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிலையத்தில் முகப்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பட்டியல் எழுத்தர் சக்திவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சில திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 580 மூட்டைகளில் 47 நெல் மூட்டைகள் திருடு போயிருப்பதாக உறுதியானது.

    அதனைத் தொடர்ந்து ரூ 38,728 மொத்த மதிப்புடைய 40 கிலோ எடை கொண்ட 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியதாக பட்டியல் எழுத்தர் சக்திவேல் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நேற்றைய தினம் நிலைய வாட்ச் மேன் விடுமுறை காரணமாக பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகப்பட்டினத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பி வந்த கொள்ளையனை போலீசார் சென்னையில் உள்ள கேளம்பாக்கத்தில் கைது செய்தனர்.
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது.

    இந்த நிலையில் கோபி செட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நாகை காவல் நிலையத்தில் தனசேகரன் மீது வழக்கும் உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தனசேகரனை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த 17-ந்தேதி கோபி செட்டிபாளையத்தில் இருந்து வேளாங்கண்ணி போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர்.

    தஞ்சை மாவட்டம் வளம்பகுடியில் அருகே காவலர்கள் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு 2 காவலர்கள் சென்றபோது, காவல் வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் தூங்கியபோது கைதி தனசேகரன் கை விலங்குடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த வேளாங்கண்ணி காவல் நிலைய எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், ஜெகதல பிரதாபன், விஜயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பின்னர் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.

    நாகை டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கேளம்பாக்கத்தில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனை இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    கோடியக்காட்டில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அவுலியாக்கன்னி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. 

    முன்னதாக கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலிலிருந்து மின்விளக் குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சந்தனம் அவுலியாக்களின் ஒலியுல்லா தர்காவிற்கு முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் எடுத்து வரப்பட்டது. 

    வழிநெடுகிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் சந்தனக்கூடு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சந்தனக்கூட்டிற்கு முந்திரி, திராட்சை, ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கினர். 

    சந்தனக்கூடு ஊர்வலம் கோடியக்காடு அவுலியாகன்னி ஒலியுல்லா தர்காவிற்கு வந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, விழா குழு தலைவர் ஜின்னா மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அலிமெக்தர், சாபீக் ,கல்பான், இம்ராஜ் மற்றும் ஜாமத் மன்றத்தினர் கலந்துகொண்டானர்.
    தோப்புத்துறையில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் அரசு பள்ளி கடவுள் கொடுத்த வரம் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமுர்த்தி வரவேற்றார். 

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் இலவச கட்டாய கல்வி மற்றும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குதல் ஆகிய தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி என்பது கடவுள் கொடுத்த வரம். 

    பள்ளிக்குச் செல்லும் தங்களது குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பள்ளியில் சிறப்பாக கற்பித்த ஆசிரியை னிதாவிற்கு புத்தகத்தை பரிசு வழங்கி பாராட்டினார்.இதில் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், விமலா, தாசில்தார் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு
    10,000 உதவித் தொகை வழங்க முன்வந்ததுபோல் நாடு முழுவதும் திட்டம் கொண்டுவரவேண்டும் எனஅகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ்திகாயத் பேசினார்.

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் 200 விவசாயிகளுக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ்தியாகத், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத் பேசும்போது, தெலுங்கானாவில் அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளது.

    இதுபோன்ற திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றார்.
    வேளாங்கண்ணி அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமலிருந்த பெரிய ஏரி தூர்வாரும் பணிகள் பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. இந்த ஏரி மூலமாக பிரதாபராமபுரம், காமேஸ்வரம், பூவைத்தேடி, செருதூர், திருப்பூண்டி, விழுந்தமாவடி, தலையாமழை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாயம் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் காவிரி மருத்துவமனை மற்றும் மில்கி மிஸ்ட் நிறுவனம் நிதியுதவியுடன் இணைந்து பெரிய ஏரியை ராட்சத ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் நிமல்ராகவன், மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில் ஆக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆக்கி சங்க முன்னாள் தலைவர் அலெக்சிஸ் புஷ்பராஜ் நினைவாக விளையாட்டு கழகம் தொடக்க விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் ,
    ஆக்கி மட்டை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×