என் மலர்
நாகப்பட்டினம்
நாகையில் பா.ஜ.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை கொட்டுப் பாளைய தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). இவர் நாகை நகர பா.ஜ.க. துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இது தவிர அந்த காலனியில் உள்ள மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் உதயகுமார் தூங்கி கொண்டிருந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார் 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானதையும், வீட்டின் முன்பகுதி எரிந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்ர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப் பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாகை கொட்டுப் பாளைய தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). இவர் நாகை நகர பா.ஜ.க. துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இது தவிர அந்த காலனியில் உள்ள மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் உதயகுமார் தூங்கி கொண்டிருந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார் 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானதையும், வீட்டின் முன்பகுதி எரிந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்ர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப் பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திட்டச்சேரி அரசு பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்றார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, ஓவியப் பயிற்சி, பட்டறை நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி வரவேற்றார்.
இதில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து ஓவிய பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மஞ்சப்பை, மரக்கன்றுகளை வழங்கி அத்துடன் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆகாமல் படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ரபீக், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகம்மது சுல்தான், ஓ.என்.ஜி.சி பொது மேலாளர்கள் மாறன், வி.என்.ராவ், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் நசீரா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் திட்டச்சேரி சித்தமருத்துவர் அஜ்மல்கான் கபசுர குடிநீர் வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, ஓவியப் பயிற்சி, பட்டறை நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி வரவேற்றார்.
இதில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து ஓவிய பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மஞ்சப்பை, மரக்கன்றுகளை வழங்கி அத்துடன் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆகாமல் படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ரபீக், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகம்மது சுல்தான், ஓ.என்.ஜி.சி பொது மேலாளர்கள் மாறன், வி.என்.ராவ், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் நசீரா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் திட்டச்சேரி சித்தமருத்துவர் அஜ்மல்கான் கபசுர குடிநீர் வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
நாகையில் நடைபெற்ற சோதனையில் தகுதி சான்றில்லாத 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் மற்றும், தஞ்சாவூர் துணைப் போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாகை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு தினங்கள் நடைபெற்ற வாகன சோதனையில், அனுமதி சீட்டு இல்லாமல் ஓட்டிவந்த வாகனங்கள், தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம்
இல்லாமல் இயக்கி வந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மாநில சொகுசு ஆம்னி பஸ்கள்-2, மேக்சிகேப் வாகனங்கள்-3, சரக்கு வாகனங்கள்-2 மற்றும் இலகுரக சரக்கு வாகங்கள்-8 என 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வரியாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 10-ம் அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமருகல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான படிவம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான படிவத்தை விவசாயிகளிடம் திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், அட்மா திட்ட வட்டார தலைவருமான செல்வ செங்குட்டுவன் வழங்கினார்.
அதே போல் புத்தகரம் மற்றும் ஆதினக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வடிவேல், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் விஜியகணபதி, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி செயலாளர் குமார், கிளை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் லதாஅன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவுஜியாபேகம் அபுசாலி, முகம்மது சாதிக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளைய த்தில் உள்ள திருவொற்றீஸ்வரர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் கீதாராணி வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாதிரி தொழிற்சாலை, உலக வெப்பமயமாதல் தடுத்தல், மழைநீர் சேகரிப்பு,
சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி, குதுப்பினார், லைட் ஹவுஸ், காய்கறிகளால் ஆன பொம்மை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
பள்ளி செயலர் ராமச்சந்திரன் முன்னிலையிலும் நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையிலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் சுந்தரேஸ்வரி கணேசன், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
5 முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் காட்சிப் படுத்திய படைப்புகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நாகை அருகே அபூர்வ வகை ஆந்தை வலையில் சிக்கியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் தாண்டவ மூர்த்திகாடு பகுதியில் உள்ள அலை அருண் என்பவரது வயலில் கட்டப்பட்டிருந்த மீன் வலையில் இதய வடிவிலான முகம் கொண்ட அபூர்வவகை ஆந்தை சிக்கியது.
இதனை பார்த்த அலைஅருண் நாகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வந்த வனத்துறையினர் ஆந்தையை கைப்பற்றி வனப்பகுதியில் கொண்டு சென்று பறக்கவிட்டனர்.
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கபட்ட நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தப்பிய இரு முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது.
தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9000 ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தி துவங்கி உள்ளனர்.
தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் மிகக் கடுமையாகவும் உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும்.
இந்த ஆண்டு உப்பு உற்பத்தி துவக்கத்தில்பருவம் தப்பிய மழையால் இரண்டு மாதம் பாதித்த நிலையில் ஆண்டு இலக்கை எட்ட உப்பள பகுதிகளில் தொழிலாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
கோடியக்கரை கடற்கரையில் பலத்த சூறைக்காற்றில் மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் இன்று காலை திடீர் நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்று கடலில் இருந்து கிளம்பி தரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகைகள் காற்றில் பறந்தன . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் இன்று காலை திடீர் நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்று கடலில் இருந்து கிளம்பி தரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகட்டை 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகைகள் காற்றில் பறந்தன . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
கடற்கரையில் மீனவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமருகல் அருகே பகத்சிங் நினைவு நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார்.
கட்டுமாவடி கிளைச் செயலாளர் தமிழரசன், கட்சியின் மூத்த நிர்வாகி அப்பாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் கொடியேற்றி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாள் நடைபெறும் மாநில மாநாட்டை முன்னிட்டு 23 மாநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டது.
இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
வேதாரண்யம் பகுதியில் மாடுகளை கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு செட்டிபுலம், கரியாபட்டினம் உள்ளிட்ட 25&க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி வயல்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ரசாயன உரங்கள் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கின்றனர்.
குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் கட்டி மண்ணை வளமாக்கி இயற்கையான சாகுபடிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வை எதிர்நோக்கும் விவசாயிகளின் இந்த முயற்சியை மக்கள் பாராட்டுகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு செட்டிபுலம், கரியாபட்டினம் உள்ளிட்ட 25&க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி வயல்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ரசாயன உரங்கள் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடைகட்டி வயலுக்கு உரம் சேர்க்கின்றனர்.
குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் கட்டி மண்ணை வளமாக்கி இயற்கையான சாகுபடிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வை எதிர்நோக்கும் விவசாயிகளின் இந்த முயற்சியை மக்கள் பாராட்டுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் கழக துணை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3 ஆயிரம் மெட்ரிக் டன் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு ரெயில்வே வேகன் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் நெல்கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் நடந்து வருகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாவட்டத்திலுள்ள 5 திறந்தவெளி மையத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக (நெல் கொள்முதல் மற்றும் இயக்கம்) துணை மேலாளர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் மேலகாடு கிராமத்தில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் பேரன் விமல்குமார் வசித்து வருகிறார் மோகன் தனது மனைவி ராஜலட்சுமி இடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மனைவி பணம் தர மறுத்துள்ளார் இதனால் விரக்தி அடைந்த கணவர் மோகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து விட்டார் ஆபத்தான நிலையில் மோகனை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் மேலகாடு கிராமத்தில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் பேரன் விமல்குமார் வசித்து வருகிறார் மோகன் தனது மனைவி ராஜலட்சுமி இடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மனைவி பணம் தர மறுத்துள்ளார் இதனால் விரக்தி அடைந்த கணவர் மோகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து விட்டார் ஆபத்தான நிலையில் மோகனை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






