என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
நாகை மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு பின்னர் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வு வாய்ப்புகள், கல்லூரிகளைத் தேர்வு செய்தல், சுயதொழில் வாய்ப்புகள் வேலைவாய்ப்பு பெறத்தக்க படிப்புகள் போன்றவை குறித்து ஒலி&ஒளி கருவிகளுடன் தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன், முதுகலை ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
முடிவில் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Next Story






