என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன்.
தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நாகை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளைய த்தில் உள்ள திருவொற்றீஸ்வரர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் கீதாராணி வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாதிரி தொழிற்சாலை, உலக வெப்பமயமாதல் தடுத்தல், மழைநீர் சேகரிப்பு,
சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி, குதுப்பினார், லைட் ஹவுஸ், காய்கறிகளால் ஆன பொம்மை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
பள்ளி செயலர் ராமச்சந்திரன் முன்னிலையிலும் நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையிலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் சுந்தரேஸ்வரி கணேசன், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
5 முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் காட்சிப் படுத்திய படைப்புகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
Next Story