என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
    X
    கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    பகத்சிங் நினைவு நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி

    திருமருகல் அருகே பகத்சிங் நினைவு நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். 

    கட்டுமாவடி கிளைச் செயலாளர் தமிழரசன், கட்சியின் மூத்த நிர்வாகி அப்பாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் கொடியேற்றி வைத்தார். 

    அதைத்தொடர்ந்து மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாள் நடைபெறும் மாநில மாநாட்டை முன்னிட்டு 23 மாநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டது. 

    இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×