என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகப்பட்டினத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பி வந்த கொள்ளையன் சென்னையில் கைது

    நாகப்பட்டினத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பி வந்த கொள்ளையனை போலீசார் சென்னையில் உள்ள கேளம்பாக்கத்தில் கைது செய்தனர்.
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது.

    இந்த நிலையில் கோபி செட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நாகை காவல் நிலையத்தில் தனசேகரன் மீது வழக்கும் உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தனசேகரனை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த 17-ந்தேதி கோபி செட்டிபாளையத்தில் இருந்து வேளாங்கண்ணி போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர்.

    தஞ்சை மாவட்டம் வளம்பகுடியில் அருகே காவலர்கள் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு 2 காவலர்கள் சென்றபோது, காவல் வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் தூங்கியபோது கைதி தனசேகரன் கை விலங்குடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த வேளாங்கண்ணி காவல் நிலைய எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், ஜெகதல பிரதாபன், விஜயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பின்னர் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.

    நாகை டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கேளம்பாக்கத்தில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனை இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    Next Story
    ×