என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் விசாரணை
ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வாலிபர் கைது
நாகை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம் பெரியத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தமிழ்செல்வம் (25) மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த 15&ந் தேதி அதே பகுதியை சேர்ந்த வீரையன் மகன் சதீஷ்குமார் (25) என்பவர் தமிழ்செல்வத்தை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக செந்தில்குமார் வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






