search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை மையம்"

    • கலெக்டர் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    இதில், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயாமுரளி, வாலாஜா அரசு தலைமை மருத்து வமனையின் முதன்மை மருத்துவர் உஷாநந்தினி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
    • இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசிநாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    • வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.
    • நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர்.

    அவினாசி,

    தமிழகம் மற்றும் கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜி கனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், 3 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில் 51 பேர், கேரள பிரிவில், 49 பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தினர் நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர் என்றனர்.

    ×