என் மலர்
நீங்கள் தேடியது "சேவை மையம்"
- மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
- இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசிநாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.
- கலெக்டர் திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சேவை மையத்தை திறந்து வைத்தார்.
இதில், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயாமுரளி, வாலாஜா அரசு தலைமை மருத்து வமனையின் முதன்மை மருத்துவர் உஷாநந்தினி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.சி.) குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்து துறைகளுடன் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது. 310 குறை–களை பொதுமக்கள் குறுந்தகவல், இணையதளம் மூலம் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நவீன வசதிகளுடன் இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மேயர் தெரிவித்தார்.






