search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்.
    X
    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்.

    வேளாங்கண்ணி பேராலய திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி வேளாங்கண்ணி பேராலய திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்றதும், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது,

    தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டும், சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.

    பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×