என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    வேளாண் உபகரணங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றி கூறினர்.
    மயிலாடுதுறை:

    முன்னாள் முதல்வர் கருணாநி விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக இலவச மின்சாரம், உழவர் சந்தை, ரூ.8000 கோடி விவசாயிகளின்

    நகை கடன் தள்ளுபடி, 1996ம் ஆண்டு ரூ.250 கோடியில் ஏரி குளங்கள் மறு சீரமைப்பு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். இதேபோல் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன்

    விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட், இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை பணிகளை இயந்திர மயமாக்கல், சூரிய சக்தியினை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துதல், ஒவ்வொரு

    மாவட்டத்திலும் உழவர் சந்தையில் சிறு தானியம் பயிர்வகை விற்பனை செய்ய அனுமதி போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  குறிப்பாக காவிரி டெல்டா

    மாவட்டங்களில் கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5,158 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற

    திட்டங்களை விவசாயிகளுக்கு செயல்படுத்தினார்.  மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் கடப்பாரை, இரும்பு சட்டி, களைக்கொத்தி, மண்வெட்டி, 2 கதிர்அரிவாள்

    போன்ற வேளாண் உபகரணங்களின் தொகுப்புகளை 64,444  வேளாண்மை குடும்பங்கள்  பயன்பெறும் வகையில் வழங்கிடும் வகையில் முதலாவதாக 5 வேளாண்மை குடும்பங்களுக்கு முதல்வர் வழங்கி

    தொடங்கி வைத்தார். வேளாண் உபகரணங்களை வழங்கி வேளாண் உபகரணங்கள் தொகுப்பு, விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2250 மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும்

    பழங்குடியினர் விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2700 மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன்

    மேம்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கும் திட்டமாகும். வேளாண் உபகரண தொகுப்புகள் பயன்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது.

    மு.தென்னரசு என்ற விவசாயி கூறுகையில்:- மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளுர் கிராமத்தில் வசிக்கிறேன். சிறு விவசாயி. முதலமைச்சர் வேளாண்-மைத்-துறை சார்பாக விவசாயிகளுக்கு

    பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தில் மானிய விலையில் கருவிகள் வேண்டி வேளாண்மைத் துறையில் விண்ணப்பித்தேன். பண்ணை உபகரணங்களான

    கடப்பாரை, மண்வெட்டி, இரண்டு கதிர்அரிவாள் உள்ளிட்-டவைகள் மானிய விலையில் வழங்கப்பட்டது, இது போன்ற  திட்டங்கள் உழவு செய்யும் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 
     
    இத்திட்டத்தினை வழங்கிய முதலமைச்சருக்கும்,  வேளாண்மைத்துறை அமைச் சருக்கும் நன்றி.பா.மதி என்ற விவசாயி கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம்

    சோழம்பேட்டை ஊராட்சியில் வசிக்கிறேன். வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்ததை தெரிந்து கொண்டு பண்ணை

    கருவிகள் வேண்டி விண்ணப்பம் செய்தேன். வேளாண்மைத்துறை சார்பாக மானியவிலையில் எனக்கு அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    மஞ்சுளா, கணவர் பெயர் பஞ்சநாதன், என்ற விவசாயி கூறுகையில்: சீர்காழி வட்டம் அகணி கிராமத்தில் வசிக்கிறேன். 2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துவரும் நான் வேளாண் உபகரண தொகுப்

    புகள் வழங்கும் திட்டங்களை தெரிந்து கொண்டு மானிய-விலையில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பெற, இணையத்தில் பதிவு செய்து கைப்பேசியில் குறுஞ்செய்தி--யின் மூலமாக  மானிய

    விலையில்  நான்கு வரிசை நெல்நடவு இயந்திரம் பெற்-றேன்.  இதன் மொத்த மதிப்பு  ரூ.2,68,000 ஆகும் அதில் 50 சதவீதம் மானி-யமாக ரூ. 1,34,000 பெற்றேன்.  இவ்வாண்டு நெல்சாகுபடி நெல்நடவு

    எந்திரத்தின் வாயிலாக மேற்கொண்டோம்.  நெல்நடவு இயந்திரம் பயன்படுத்துவதால் ஒரு ஏக்கருக்கு ரூபாய். 3,000வரை மிச்ச-மாகிறது 2 ஏக்கர் நிலத்திற்கு ரூபாய். 6,000 வரை மிச்சமாகிறது.  இதனால்

    எங்களுக்கு சுமார் ரூபாய். 40,000 வரை வருமானம் கிடைக்கிறது.  இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி என்னை போன்ற ஏழை சிறு குறு விவசாயிகளின் வாழ்வா-தாரத்தை பேணிவரும் மைத்துறை அமைச்சர்

    ஆகியோருக்கும் அனைத்து விவசாய பெருமக்கள் சார்பாக நன்றி. இவ்வாறு விவசாயிகள் கூறின.
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்-தியாக எழுந்தருளி

    எமனை வதம் செய்ததால் அட்டவீ-ரட்டத் தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.  இக்கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது

    ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு நேற்று மாலை சசிகலா வந்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை மாணிக்-கவாசக தம்பிரான் சுவாமிகள் தலைமையில் மரியாதை

    செய்து வரவேற்-பளிக்கப்-பட்டது.  தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற சசிகலா கோ பூஜை, கஜ பூஜை, செய்த பின்னர் கள்ள விநாயகர், சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம் ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி

    சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார்.
    கீராநல்லூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக்கூட்டம் நடைபெற்றது.

    தலைமையாசிரியை ஜெ.மேகலா தலைமை வகித்தார்.பத்மாவதி வரவேற்புரை ஆற்றினார். பார்வையாளராக கொள்ளிடம் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் கணேஷ் பங்கேற்றார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எஸ்.எம்.சிகுழு மாற்றி அமைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின் படி பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

    தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிகளை ஆ.பிரியா ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.நிகழ்ச்சி முடிவில்

    சுமதி நன்றி கூறினார்.
    செம்பனார்கோயில் அருகே சீதளாதேவிமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் 48-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு இரட்டைகுளக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பபட்டது. சக்தி கரகத்துடன் பால் காவடி, அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் வாயில் 16 அடி நீள அலகுகுத்தியும

    வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்க தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி

    விரதமிருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தீமிதித்து தங்களின் நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தீயணைப்புத்

    துறையினர் மற்றும் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருக்கடையூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஒன்றியம், திருக்கடையூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி

    சிவராஜ் தலைமை தாங்கினார்.பற்றாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் துளசிரேக்கா ரமேஷ், செம்பனார்கோயில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.

    ஊராட்சி துணை தலைவர் அசோக் (எ) சம்பத்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வெங்கடேசன் அரசு வடிவமைத்த தீர்மா-னங்களை படித்துகாட்டினார். பொதுமக்களிடமிருந்து

    பல்வேறு குறைகள் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் நல்ல குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார சீர்கேடுகளை செய்துவரும் பன்றிகளை கூடியவிரைவில் உரிமையாளர்களிடம்

    சொல்லி கட்டுப்படுத்தப்படும். திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சியில் ஏற்படும் குப்பைகளை அவ்வப்போது ஆட்கள் கொண்டு

    சுத்தப்படுத்தப்படும். சுகாதாரமாக இருக்க பொதுமக்கள் ஆதரவோடு ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வார்டு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.
    சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று பக்தர்கள் வழிபட்டனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையும் புகழும் வாய்ந்த தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில்

    உள்ளது. நவக்கிரக தலங்களில் செவ்வாய்க்கு உரிய இக்கோ-விலில் காரைக்-குடி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, புதுக் கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்

    சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் குலதெய்வக் கோவி-லாகவும் விளங்கி வருகிறது. நகரத்தார் சமுகத்தினர் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2 -வது செவ்வாய்க்-கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு

    வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வகையில் இரண்டாவது செவ்வாய்க்-கிழமை-யான இன்று நகரத்தார் சமூகத்தினர் வழிபாடு செய்வதற்காக தங்கள் ஊர்களிலிருந்து மஞ்சள் தடவிய

    வேப்பிலை செருகிய குச்சியினை கையில் ஏந்தி பாதயாத்திரையாக புறப்பட்டு பலநூறு கிலோமீட்டர் நடைபயணமாக வந்து கோவிலை வந்தடைந்தது வருகின்றனர். 

    இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மயிலாடுதுறை வழியாக பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். 

    வழிநெடுகிலும் பக்தர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் மக்கள் நலன் விரும்-பிகள் நீர்மோர் அளித்தும், அன்ன-தானம் அளித்தும் உதவினர்.

    வழக்கறிஞர்களின் சேமநல நிதியை உயர்த்தி வழங்கியதற்கு மயிலாடுதுறையில் முதலமைச்சருக்கு நன்றி கூறி வக்கீல்கள் கொண்டாடினர்.
    தரங்கம்பாடி:

    வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்கு வரவேற்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நீதிமன்றம் முன்பு பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டும் கொண்டா-ட்டத்தில் ஈடுபட்டனர்.

    2012-ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் சேமநல நிதி தற்போது தமிழக முதல்வரால் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    இதில் மாவட்ட வழக்றிஞர்கள் அமைப்பாளர்கள் சிவதாஸ், அருள்தாஸ், கோபி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி அடுத்த புத்தூர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு மாவட்ட, மாநில மற்றும் இந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பேசி பரிசு வழங்கினார். 

    அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்விதுறை பேராசிரியர் முனைவர் பாலமுருகன், மனவள பயிற்றுனர் பாபுநேசன், ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சாமிகணேசன், கண்ணையன், மயிலாடுதுறை அமைச்சர் கபடி கழக செயலாளர் ஜே.ஹென்ரி, உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லத்துரை, ரஜினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர். 

    இதில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன் விளையாட்டுத்துறையில் 2021-22 வரை சாதித்த மாணவ மாணவிகள் விபரங்களை ஆண்டறிக்கையாக வாசித்தார். பேரவை பொறுப்பாசிரியர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் நாராயணசாமி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார், வணிக நிர்வாகிகவியல் துறை தலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சீர்காழி மாஸ்டர் தினேசின் மாவீரன் சிலம்பாட்ட குழு இளம் சிலம்ப வீரர்கள் 50 பேர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இறுதியாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றிக் கூறினார்.
    மயிலாடுதுறையில் ரூ.8.70 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
    மயிலாடுதுறை:

    முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை காவேரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 862.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 
    8.70 கோடி மதிப்பீட்டில் 49 பணிகளை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. முன்னிலையில், மாவட்ட கலெக்டர் இரா.லலிதா இன்று தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி பாலூர் பகுதியில் சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:&

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சிறப்பு தூர் வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 49 பணிகள், 849 கி.மீ தூரத்திற்கு உள்ள வாய்க்கால்கள் து£ர் வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8.70 கோடி செலவில் தூர் வாரும் பணிகள் நடக்கிறது.

    இவ்வாண்டு ஏப்ரல் மாத கடைசியில் துவங்கி காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இங்கு வருவதற்குள் எல்லா வாய்க்கால்களும் தூர்வாரப்படும் என்று ஆணையிட்டதற்கிணங்க, இதற்கான மதிப்பீடுகள் தயாரித்து இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வேலை ஜூன் முதல் வாரத்திலேயே முடிந்துவிடும். ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து இங்கு வருவதற்கு 20-ம் தேதி ஆகும் அதற்கு முன்கூட்டியே 
    49 வேலைகளும் முடிக்கப்படும். இதற்காக சிறப்பாக 70 எந்திரங்கள் இரண்டு ஷிப்டாக ஏற்பாடு செய்து அதற்கு முன்னதாகவே முடிக்கப்படும். 

    இது மட்டுமில்லாமல் விவசாயிகள் கருத்துக்கள் கேட்டு இன்னும்  ஒரு சில பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து 
    அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 

    மேலும் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து 
    800 கி.மீ உண்டான கால்வாய்கள் தூர் வார நடவடிக்கை எடுத்துள்ளோம். அதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முடிக்கலாம். 

    இந்த வருடம் காவேரியிலிருந்து தண்ணீர் வருவதற்குள் கடைமடை வரைக்கும் வருவதற்க்கு அனைத்து வாய்க்கால்களும் எடுத்து கொண்டு உள்ளோம். சென்ற ஆண்டு தூர் வார எடுக்கப்பட்ட பணிகள் ஏதுவும் இவ்வாண்டு எடுக்கப்படவில்லை. 

    மேலும் 49 பணிகளை கண்காணித்திட 49 வேளாண்மை உழவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சமந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளனர். 

    இவர்கள் இப்பணிகள் சரியான முறையில் பணிகள் நடைபெறுகிறதா? குறித்த ஆழத்திற்கும் அகலத்திற்கும் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றதா? என்பதை கண்காணிப்பார்கள் என்றார. 

    இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை)  சண்முகம், செம்பனார்கோவில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், இணை இயக்குநர் வேளாண்மைத்துறை சேகர், உதவி பொறியாளர் விவேகானந்தன், விஜயபாஸ்கரன், வீரப்பன், எடுத்துக்கட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பைலட், திருக்களாச்சேரி ஊராட்சி தலைவர் சம்சத்ரபிக் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். 

    சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜய்யேஸ்வரன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை குறித்து எம்.எல்ஏ.விடம் எடுத்துரைத்தனர். அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். 

    இதேபோல் திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
     
    அகணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையிலும், நிம்மேலி ஊராட்சியில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையிலும், செம்மங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமையிலும், விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    சீர்காழியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சீர்காழி:

    தமிழக அரசு சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றுஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் எதிரே அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர செயலாளர் அருண்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் பங்கேற்று கண்ட உரையாற்றினார்.

     இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வாய்மை இளஞ்சேரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்று சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
    தமிழகம் சமத்துவம் கொண்ட நாடு; இதன் மாடல் திராவிடம் தான் என மயிலாடுதுறையில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் துரை.வைகோ பேசியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ம.தி.மு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்க்கோனி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகன், நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினருமான,  நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:

    தமிழகத்தில் மின்-வெட்டுக்கு காரணம் ஒன்றிய அரசுதான். வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது காரணம். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவர் தனியார் மின்சார துறைகளிடமிருந்து ஒப்பந்தம் செய்து வருகிறார். கூடிய விரைவில் சரியாகிவிடும்.

    தமிழ்நாடு சமத்துவம் கொண்ட நாடு. இதன் மாடல் திராவிடம்தான். தமிழகத்தில் மதவாதிகளையும் கலவரம் தூண்டுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். 

    தமிழக அரசுக்கு பாலமாக எப்போதும் இருக்கும் மதிமுக. தமிழக மக்களுக்கு துரோகமும், வஞ்சகமும் செய்துவருகிறார் கவர்னர் கே.என்.ரவி இவர் பா.ஜ.கவின் ஆளுநர். 

    மத்திய பல்கலைக்-கழக தேர்வு, நீட் தேர்வு போன்றவை மத்திய அரசின் மக்கள் விரோத செயல் தான் என பேசினார். 
    நிகழ்ச்சியில் கழகப் பேச்சாளர் அழகிரி மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி தலைவர்கள், கிளை செயலா-ளர்கள் கலந்து கொண்டனர்.
    ×